search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குட்கா பொருட்கள் பறிமுதல்"

    • சரக்கு வேனில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
    • சரக்கு வேனில் இருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள 2 டன் கிலோ மதிப்பிலான கூலிப், புகையிலை, போதை பாக்கு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தருமபுரி:

    கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் சரக்கு வாகனம், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களில் அடிக்கடி தமிழகத்திற்கு தருமபுரி வழியாக அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், பான்பராக், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை மர்ம நபர்கள் கடத்தி வருகின்றனர்.

    இதன்காரணமாக தருமபுரி மாவட்ட எல்லை பகுதிகளில் அந்தந்த பகுதியில் உள்ள போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவிட்டிருந்தார்.

    அவரது உத்தரவின்பேரில் தருமபுரி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜய்சங்கர், இளமதி ஆகியோர் தலைமையில் போலீசார் இன்று காலை 9 மணியளவில் கிருஷ்ணகிரி-தருமபுரி சாலையி்ல் புதிய ரவுண்டனா பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது மைசூருவில் இருந்து வந்த சரக்கு வேனை மறித்து சோதனையிட்டனர். அதில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே வேன் டிரைவரை பிடித்து விசாரித்ததில் கர்நாடகா மாநிலம் மைசூரு சி.வி.ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முஜிபுல்லா செரிப் (50) என்பவர் மைசூருவில் இருந்து சேலத்துக்கு குட்கா பொருட்களை கடத்தி கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சரக்கு வேனில் இருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள 2 டன் கிலோ மதிப்பிலான கூலிப், புகையிலை, போதை பாக்கு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பானுசுஜதா, ஆய்வாளர் நந்தகோபால் மற்றும் மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்சங்கர் வழக்கு பதிவு செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு 2 டன் அளவிலான தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை சரக்கு வேனில் கடத்தி வந்த சம்பவம் போலீசாரால் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 262 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது
    • 4 வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் காவல் சூப்பிரெண்டு வந்திதாபாண்டே உத்தரவின் பேரில் சிறப்பு தனிப்படை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர். சோதனையில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரி ரவுண்டானாவில் இருச்சக்கர வாகனத்தில் சில்லரை வியாபாரிகளுக்கு சப்ளை செய்வதற்காக ராஜகோபாலபுரம் பூங்கா நகரை ேசர்ந்த சண்முகலிங்கம் மகன் வசந்த்குமார் (வயது33) 262 கிலோ தடை செய்ய ப்பட்ட குட்கா பொருட்களை வைத்திருந்தார்.இதனை பார்த்த போலீசார் அவரை கைது செய்து, 262 கிலோ குட்கா பொருட்களையும், ரொக்கம் ரூ.1,180ம், இருசக்கர வாகனம் மற்றும் ஒரு மொபைல் போனையும் பறிமுதல் செய்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், இவர் பெங்களூரி லிருந்து வாங்கி வந்து புதுக்கோட்டையில் சில்லரையில் விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து வசந்த்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதே போல் கீரனூரில் மளிகை கடையில் குட்கா பொருட்களை விற்பனை செய்த சையது இப்ராகிம்(42), அரிமளம் அருகே வடக்கு நல்லிப்பட்டியில் மளிகை கடையில் குட்கா பொருட்களை விற்பனை செய்த பாண்டித்துரை(60), ராயவரத்தில் வினாயகர் ஸ்டோரில் விற்பனை செய்த உலகப்பன்(40) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அரிமளம் அருகே ஆயிங்குடியில் கண்ணன் டீ கடையில் குட்கா பொருட்களை விற்பனை செய்த கண்ணன் மனைவி காளியம்மாள் மீது போலிசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    • வட்டார சுகாதார அலுவலர் சிவகுரு தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
    • உணவு பொருட்கள், போலி சிகரெட் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் உள்ள நகரத்தின் முக்கிய வீதிகளான பஸ் நிலையம், ஸ்தூபிமைதானம், எம்.ஜி.ரோடு, கடைவீதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வட்டார சுகாதார அலுவலர் சிவகுரு தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் ஹான்ஸ், குட்கா, புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையைடுத்து அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் டம்ளர், காலாவதியான பிஸ்கட் பாக்கெட், உணவு பொருட்கள், போலி சிகரெட் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

    மேலும் ஓட்டல்,பேக்கரி கடைகள், பல்பொருள் அங்காடிகள், நடைபாதை கடைகள்,டீ கடைகள்,சாலையோர தனியார் பால் விற்பனை கடைகள், மொத்த மற்றும் சில்லறை மளிகை கடைகளிலும் 300 கிலோ பிளாஸ்டிக், 70 கிலோஹான்ஸ், 70 கிலோ குட்கா பறிமுதல் செய்தனர்.

    இந்த ஆய்வில் சுகாதார ஆய்வாளர் தமிழ்செல்வன், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் உடனிருந்தனர்.

    • புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 4 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்
    • புதுக்கோட்டையை சேர்ந்த சுதாகர் (41)ராப்பூசல் சேர்ந்த பன்னீர்செல்வம் (48) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்

    புதுக்கோட்டை:

    தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு வருகிறார்கள்.

    குறிப்பாக வட மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களை கடுமையான சோதனைக்கு பின்னரே அனுமதிக்கிறார்கள்.

    இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் அதிக அளவில் விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலை அடுத்து போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது இலுப்பூர் மேட்டு சாலை பகுதியில் தனியார் பேக்கரி முன்பாக நின்று கொண்டிருந்த காரை சோதனையிட்டதில் அதில் அரசால் தடை செய்யப்பட்ட 4.273 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை இலுப்பூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    குட்கா கடத்தி வந்த புதுக்கோட்டையை சேர்ந்த சுதாகர் (41)ராப்பூசல் சேர்ந்த பன்னீர்செல்வம் (48) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் வட மாநிலத்தில் இருந்து இலுப்பூர் பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்வதற்காக கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

    ×