search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்-2 பேர் கைது
    X

    தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்-2 பேர் கைது

    • புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 4 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்
    • புதுக்கோட்டையை சேர்ந்த சுதாகர் (41)ராப்பூசல் சேர்ந்த பன்னீர்செல்வம் (48) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்

    புதுக்கோட்டை:

    தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு வருகிறார்கள்.

    குறிப்பாக வட மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களை கடுமையான சோதனைக்கு பின்னரே அனுமதிக்கிறார்கள்.

    இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் அதிக அளவில் விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலை அடுத்து போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது இலுப்பூர் மேட்டு சாலை பகுதியில் தனியார் பேக்கரி முன்பாக நின்று கொண்டிருந்த காரை சோதனையிட்டதில் அதில் அரசால் தடை செய்யப்பட்ட 4.273 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை இலுப்பூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    குட்கா கடத்தி வந்த புதுக்கோட்டையை சேர்ந்த சுதாகர் (41)ராப்பூசல் சேர்ந்த பன்னீர்செல்வம் (48) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் வட மாநிலத்தில் இருந்து இலுப்பூர் பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்வதற்காக கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

    Next Story
    ×