search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடும்பத்தலைவி"

    • பட்டுப்புடவைகளை அலமாரியில் மடித்தே வைத்திருப்போம்.
    • கிச்சனில் இரவில் சிங்க் பகுதியில் நிறைய கரப்பான் பூச்சிகள் ஆக்கிரமிக்கும்.

    வீட்டில் பெண்கள் தான் அதிகளவு வீட்டு வேலைகளை செய்கின்றனர். அந்த வகையில் பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்கக்கூடிய அற்புதமான குறிப்புகள். வாங்க பார்க்கலாம்....

    * ஃபிரிட்ஜில் உள்ள ஃப்ரீசர் பெட்டியில் ஆங்காங்கே ஐஸ்கட்டிகள் உறந்தபடி இருக்கும். இதனை தவிர்ப்பதற்காக ஃப்ரீசர் பெட்டியில் பொடி உப்புகளை லேசாக தூவினாற் போல் போட்டு வைத்தால் ஐஸ்கட்டி உருவாகாமல் இருக்கும்.

    * பட்டுப்புடவைகளை அலமாரியில் மடித்தே வைத்திருப்போம். அந்த மடிப்பு உள்ள பகுதிகள் நாளடைவில் கிழிந்துவிட வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமில்லாமல் பட்டுப்புடவைகளை அப்படியே வைத்திருப்பதால் ஒரு நாற்றம் எடுக்கம். அதனை தடுப்பதற்காக ஒரு பேப்பரில் ஒரு ஸ்பூன் அரிசி மற்றும் 1/4 ஸ்பூன் ஜவ்வாது பொடி இவற்றை ஒன்றாக கலந்து பேப்பரை மடித்து புடவைகளுக்கு மத்தியில் வைக்க வேண்டும். இதனால் நாற்றம் எடுக்காது.

    * சிலருக்கு தலைக்கு குளித்துவிட்டு வந்த போது முடி வறண்டு போனது மாதிரி இருக்கும். எவ்வளவு தான் கண்டிஷனர் அல்லது சீரம் தேய்த்தாகும் வறண்டு காணப்படும் அதை தவிர்ப்பதற்காக நீங்கள் பயன்படுத்தும் சீப்பை எடுத்து ஒரு பிளேட்டை எடுத்து அதில் ஒரு டம்ளர் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் சீப்பை வைத்து எடுத்து அதனை குளித்துவிட்டு வந்த தலைமுடி காய்ந்தவுடன் அந்த சீப்பை பயன்படுத்தி தலையை சீவினால் முடிகொட்டுதல், முடி வறட்சியாக காணப்படுவதில் இருந்து தடுக்கலாம்.

    * நம்முடைய வீட்டில் உள்ள கிச்சனில் இரவில் சிங்க் பகுதியில் நிறைய கரப்பான் பூச்சிகள் ஆக்கிரமிக்கும். நாம் எவ்வளவுதான் கிச்சனை சுத்தமாக வைத்திருந்தாலும் சிங்க் வழியாக கரப்பான் பூச்சி தொல்லைகள் தான் இருக்கத்தான் செய்கிறது. அப்போது வெங்காய தோல் அல்லது எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி சிங்க் பகுதிகளை இரவில் நன்றாக தேய்த்து விட்டாலும் கரப்பான் பூச்சி தொல்லை இருக்காது.

    * நாம் தினமும் பயன்படுத்தும் மிக்சி ஜாரினை எவ்வளவு தான் சுத்தமாக கழுவி வைத்தாலும் அதில் சின்ன துகள்கள் அதில் ஒட்டி தான் இருக்கும். எனவே இதனை சுத்தமாக வைத்திருக்க மிக்சி ஜாரில் காய்ந்த எலுமிச்சை தோல் துண்டுகளாக நறுக்கி சேர்க்க வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் வாஷிங் லிக்யூட் மற்றும் ஒரு ஸ்பூன் உப்பு ஆகியவற்றை சேர்த்து அடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். மிக்சி ஜார் சுத்தமாக இருக்கும். இந்த கலவையை கீழே ஊற்றாமல் இதனை பாத்திரம் கழுவதற்கும் இந்த லிக்யூடை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    * குக்கரில் சிலநேரம் நாம் பருப்பு வேக வைக்கும்போதோ அல்லது சாதம் வைக்கும் போதோ வெளியே பொங்கி வழியும் இதனை தடுப்பதற்கு குக்கரில் ரப்பர் போடும் இடத்தில் சிறய பிரஷ் கொண்டு சிறிதளவு எண்ணெய் தடவி விட்டு குக்கரை மூடி அடுப்பில் வைத்தால் பொங்கி வெளியே வராது.

    * உங்களது வீட்டில் அதிக பல்லி தொந்தரவுகள் இருக்கிறதா? அப்படி இருந்தால் ஒரு சிறிய கிண்ணத்தில் வெங்காயத்தை தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் ஒரு மூடி டெட்டாயில் ஊற்றி கலந்து பல்லி வரும் இடங்களில் ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஆங்காங்கே தெளித்து விட்டால் பல்லி தொந்தரவுகள் இருக்காது.

    * நாம் வீட்டில் சாமி படங்களுக்கு போடப்படும் பூக்களை வெளியே தூக்கி போட்டு விடுவோம். இனி அதனை தூக்கி எறியாமல் நாம் தினமும் பயன்படுத்தும் பூக்களை நிழலில் காயவைத்து மிக்சியில் போட்டு பொடித்துக்கொள்ள வேண்டும். அதனை ஒரு பிளேட்டில் கொட்டி அதில் 3 ஸ்பூன் சந்தனப்பொடி, ஒரு ஸ்பூன் பச்சைகற்பூரம், அடுத்து ஏதாவது ஊதுபத்தி, அதாவது ஊதுபத்தியின் மேல் உள்ள துண்டுகளை உதிர்த்து போட்டு அதில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக பிசறி எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் ரோஸ்வாட்டர் கொண்டு பிசைந்து முக்கோண வடிவில் செய்துகொள்ள வேண்டும். இதனை காய வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். சாம்பிராணிக்கு பதிலாக இதனை தினமும் பயன்படுத்தலாம்.

    * சிலருக்கு உடலி வியர்வை நாற்றம் அதிகமாக இருக்கும் அவர்கள் சருவத்தில் உள்ள கெட்ட அழுக்கு வாடைகள் மற்றும் வியர்வை நாற்றத்தில் இருந்து விடுபட ஒரு காட்டன் துணியில் எலுமிச்சை தோல்கள் 2 துண்டு, வேப்பிலை ஒரு கைப்பிடி, காய்ந்த வேப்பிலையாக கூட இருக்கலாம். இதனை ஒன்றாக ஒரு காட்டன் துணியில் போட்டு அதனை நன்றாக கட்டி நாம் குளிக்கும் தண்ணீர் பக்கெட்டில் போட்டுவிட்டு 10 நிமிடம் கழித்து அந்த தண்ணீரில் குளித்து வந்தால் தேவையற்ற வாசனைகள் வராது.

    ×