search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிசைக்கு தீ"

    • இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் தனக்கு சொந்தமான இடம் தொடர்பாக சிலருடன் முன்விரோதம் இருப்பதாகவும், அவர்கள் குடிசைக்கு தீ வைத்திருக்கலாம் என்று அன்னபூரணம் கூறியள்ளார்.
    • அதன் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகர்கோவில், அக். 20-

    குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள திடல் ஊராட்சிக்குட்பட்ட ரத்தினபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி அன்னபூரணம் (வயது 70).

    இவர் குடிசை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். வீட்டின் வெளியே தான் சமையல் செய்து வருகிறார். நேற்று இரவு சமையல் பணி முடிந்ததும், வழக்கம் போல் வீட்டுக்குள் சென்று அன்னபூரணம் படுத்து விட்டார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை, இவரது வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை கண்ட அன்னபூரணம் வீட்டுக்குள் இருந்து அலறியடித்தபடி வெளியே ஓடி வந்து உயிர் தப்பினார்.

    தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், நாகர்கோவில் தீயணைப்பு படையினர் சம்பவ இடம் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும், வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாயின.

    இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் தனக்கு சொந்தமான இடம் தொடர்பாக சிலருடன் முன்விரோதம் இருப்பதாகவும், அவர்கள் குடிசைக்கு தீ வைத்திருக்கலாம் என்று அன்னபூரணம் கூறியள்ளார். அதன் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×