search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கீழ்பவானி வாய்காலில் மூழ்கி"

    • ஆணின் உடல் கிடப்பதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் காசிபாளையம் இந்திரா நகர் காலனி வழியாக கீழ்பவானி வாய்க்காலின் கிளை கொப்பு வாய்க்கால் கோபி-சத்தி மெயின் ரோட்டை கடந்து செல்லும் பகுதியில் அமைந்து ள்ள பாலத்தின் அடியில் ஒரு ஆணின் உடல் கிடப்பதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெ க்டர் மோகனன் தலைமை யிலான போலீசார் சென்று பார்த்தனர். இறந்தவருக்கு சுமார் 60 வயது இருக்கும். வட மாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் தெரிய வருகிறது.

    இதையடுத்து போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இறந்தவரின் உடலில் காயங்கள் ஏதுமில்லை. பின்னந்தலையில் மட்டும் கீழே விழுந்த போது ஏற்பட்ட காயத்தால் ரத்த கசிவுள்ளது.

    மேற்படி இடத்தில் மது அருந்தும் நபர்கள் அமர்ந்து மது அருந்துவது வழக்கமாக இருந்து வருவதாக தெரிகிறது.அதில் மேற்படி இறந்த நபரும் மது போதையில் கொப்பு வாய்க்காலில் விழுந்து இறந்திருக்கலாம் என தெரிய வருகிறது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.

    இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×