search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிளி மாயம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அர்ஜூன்-ரஞ்சனா தம்பதியினர் வளர்த்துவந்த ஆப்பிரிக்க சாம்பல் கிளிகள் மத்திய ஆப்பிரிக்காவின் மழைக்காடுகளை பூர்வீகமாகக் கொண்டவை.
    • ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் பரவியுள்ளன. கிளி வகைகளில் மிகப்பெரியது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் துமகூரில் உள்ள ஜெயநகரைச் சேர்ந்தவர் அர்ஜுன்-ரஞ்சனா தம்பதி.

    இவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக ஆப்பிரிக்கன் வகையை சேர்ந்த ஒரு ஜோடி கிளிகளை பாசத்துடனும், நேசத்துடனும் வளர்த்து வந்தனர். அதில் ஆண் கிளிக்கு ருஸ்துமா என்று பெயரிட்டிருந்தனர். அதோடு ஆண்டுதோறும் கிளிக்கு பிறந்த நாள் விழாவையும் நடத்தி வந்தனர்.

    ஆண் கிளி ருஸ்துமா கடந்த 16-ந்தேதி திடீரென காணாமல் போனது. நகர் முழுவதும் அர்ஜுன்- ரஞ்சனா தேடி வந்தனர். பல இடங்களில் தேடியும் அந்த கிளி கிடைக்கவில்லை. கிளி மீது மிகுந்த பாசத்துடன் இருந்த குடும்பத்தினர், அது திரும்பி வராததால் கண்ணீர் விட்டு அழுதனர். இந்த நிலையில், அந்த தம்பதி தங்கள் கிளியை தேட தொடங்கி உள்ளனர்.

    இதற்காக அவர்கள் கிளியின் படத்துடன் பேனர் வைத்தும், துண்டு பிரசுரம் வினியோகித்தும் வருகிறார்கள். மேலும் கிளியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

    கடந்த 4 நாட்களாக தம்பதியினர் இரவு, பகலாக கிளியை தேடி வருகிறார்கள். ஆனால் இன்னும் கிளியை பற்றி அவர்களுக்கு தகவல் கிடைக்கவில்லை. ஆண் கிளி மாயமானதால், பெண் கிளி கூண்டுக்குள் தவித்து வருகிறது .

    அர்ஜூன்-ரஞ்சனா தம்பதியினர் வளர்த்துவந்த ஆப்பிரிக்க சாம்பல் கிளிகள் மத்திய ஆப்பிரிக்காவின் மழைக்காடுகளை பூர்வீகமாகக் கொண்டவை. இவை ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் பரவியுள்ளன. கிளி வகைகளில் மிகப்பெரியது.

    வெள்ளி இறகுகள், ஒரு வெள்ளை முகம், சிவப்பு நிற வால் கொண்டுள்ளது. மற்ற கிளி இனங்களை விட இந்த கிளிகள் பிரகாசமான இறகுகளை கொண்டுள்ளன. குறிப்பாக 5 வயது குழந்தைக்கு சமமான அறிவாற்றல் இவைகளுக்கு இருப்பதாக ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.

    • கடந்த 20-ந் தேதி வீட்டின் கதவு திறந்து இருந்ததால் கிளி அங்கிருந்து வெளியே பறந்து சென்றுவிட்டது.
    • கிளி மாயமானதால் சுப்பு ராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அதனை பல இடங்களில் தேடி வந்தனர்.

    மதுரை:

    மதுரை தெற்கு வெளியை சேர்ந்தவர் சுப்புராமன். இவர் வீட்டில் கடந்த ‌18 மாதங்களாக ஒரு பச்சை கிளியை பாசமாக வளர்த்து வந்தார். அந்தக் கிளிக்கு "வெல்வெட்" என்று பெயர் சூட்டி இருந்தார். அந்த கிளிக்கு பிடித்தமான உணவுகளை வாங்கி கொடுப்பார்.

    கடந்த 20-ந் தேதி வீட்டின் கதவு திறந்து இருந்ததால் கிளி அங்கிருந்து வெளியே பறந்து சென்றுவிட்டது. கிளி மாயமானதால் சுப்பு ராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அதனை பல இடங்களில் தேடி வந்தனர்.

    அது பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் கிளி பற்றி தகவல் கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என்று போஸ்டர் அடித்து நகரம் முழுவதும் ஒட்டி உள்ளனர். அதனை பார்த்துவிட்டு சிலர் தகவல்களை தெரிவித்து உள்ளனர். இருந்தபோதிலும் குறிப்பிட்ட கிளியை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுபற்றி சுப்புராமன் கூறும்போது, முதலில் லவ்பேர்ட்ஸ் பறவைகளை வளர்த்து வந்தேன். தற்போது வெல்வெட் கிளியை வளர்த்து வந்தேன். அது குடும்ப நபர்களிடம் மிகவும் பாசமாக பழகியது. பெயரை சொல்லி அழைத்தால் குரல் கொடுக்கும். அது ஒரு பெண் கிளி. அது கிடைக்காதது குடும்பத்தினர் மனதை மிகவும் வேதனைப்படுத்திவிட்டது. விரைவில் அந்த கிளி கிடைத்துவிடும். எங்கள் மகிழ்ச்சி திரும்பி விடும் என்று நம்புகிறோம் என்றார்.

    ×