search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருமாம்பாக்கம் விபத்து"

    கிருமாம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருமாம்பாக்கம்:

    கடலூர் கூத்தப்பாக்கத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது45). இவர் கடலூர் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் கடலூரில் இருந்து புதுவைக்கு வந்து கொண்டு இருந்தார்.

    கிருமாம்பாக்கம் அருகே கன்னியகோவில் என்ற இடத்தில் வந்த போது பின்னால் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. கார் அதிவேகமாக மோதியதால் கிருஷ்ணமூர்த்தி ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் எதிரே கடலூரை சேர்ந்த மாயவன் (40) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாயவன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    விபத்து நடந்த இடமான கன்னியகோவில் பாகூர் 4 முனை சந்திப்பு ரோட்டில் அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. சாலை அகலமாக உள்ளதால் தாறுமாறாக அதிவேகமாக வரும் வாகனங்கள் விபத்தை ஏற்படுத்தி பலர் உயிர் பலியாகுகின்றனர். எனவே இந்த பகுதியில் இருவழிபாதையை மாற்றி போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் விபத்துகளை தடுக்க அங்கு போக்குவரத்து போலீசாரை பணியில் அமர்த்தவேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
    ×