search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவிரி கூட்டுக் குடிநீர்"

    • காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் திருப்பத்தூருக்கு இணைப்பு வழங்கப்படுவதால் நடவடிக்கை
    • குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி தகவல்

    வேலூர்:

    வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மேட்டூரில் இருந்து காவேரி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. மேட்டூரில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 759 கிராமங்களுக்கு குடிநீர் வழங்க பிராதான குழாயில் இணைப்பு வழங்க பணி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பணியை தொடங்கி உள்ளது. இதனால் ஜோலார்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு குடிநீர் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    அதுவரை உள்ளூரில் கிடைக்கும் குடிநீர் ஆதாரத்தை வைத்து பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிவடைந்த பின்னர் வழக்கம் போல் குடிநீர் சப்ளை செய்யப்படும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×