search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cauvery collective drinking water"

    • ரூ.144.21 கோடியில் திட்டம்
    • குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் தகவல்

    திருப்பத்தூர்:

    குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியங்களில் 50 ஊராட்சிகளில், 759 கிராமங்கள் பயன்பெறும் வகையில் காவிரி கூட்டு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு வேலூர் மாவட்ட கூட்டுக் குடிநீர் திட்ட 1500 அடி விட்டம் கொண்ட ராட்சச பிரதான குழாயில் இருந்து இணைக்கும் திட்ட பணிகள் நடந்து வருகிறது.

    திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு கூட்ரோடு அருகே சுமார் 10 அடி ஆழத்தில் உள்ள குழாய்களில் இருந்து ஊராட்சிகளுக்கு செல்லும் குழாய்களில் இணைக்கும் பணி பொக்லைன் எந்திரம் கொண்டு பள்ளம் தோண்டப்பட்டு கடந்த இரண்டு நாட்களாக இரவு, பகலாக நடந்து வருகிறது.

    இத்திட்ட பணியை குடிநீர் வடிகால் வாரியமேற்பார்வை பொறியாளர்.கிருஷ்ணமூர்த்தி, பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    வேலூர் கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு, மேட்டூர் வழியாக ராட்சச பைப்புகள் அமைக்கப்பட்டு திருப்பத்தூர், ஜோலார்பேட்டை வாணியம்பாடி, , ஆம்பூர், வேலூர், ராணிப்பேட்டை, அரக்கோணம் வரை செல்கிறது.

    இந்த திட்டத்தை தமிழக அரசு விரிவுபடுத்தப்பட்டு ரூ.144.21 கோடி மதிப்பில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி, நாட்றம்பள்ளி, ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 50 பஞ்சாயத்துகள், 759, குக்கிராமங்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் வழங்கப்பட உள்ளது.

    இதற்கான பிரதான குழாய்களில் இருந்து ஊராட்சிகளுக்கு செல்லும் குழாய்களுடன் இணைக்கும் பணிகள் திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு கூட்ரோடு அருகே 4 வழி சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு இரவு பகலாக பணிகள்நடைபெற்று வருகிறது.

    பணிகள் முடிவடைந்ததும் தேசிய நெடுஞ்சாலையில் தார் சாலை தோண்டப்பட்ட பள்ளங்களும் மூடி புதிய தார்சாலை அமைத்து தரப்படும் இன்னும் 2 நாட்களுக்குள் பணிகள் முழுமையடையும் தற்போது ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்கும் பணி 88 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது.

    3 மாத காலத்திற்குள் ஊராட்சிகளுக்கு காவிரி குடிநீர் கிடைக்கும். என தெரிவித்தார். அப்போது நிர்வாக பொறியாளர்.மாணிக்கம், உதவி நிர்வாக பொறியாளர்கள் பற்குணன், தேசிங்குராஜா, மற்றும் உதவி பொறியாளர் பிரகாசம் ஆகியோர் உடன் இருந்தனர்.

    50 பஞ்சாயத்துக்கள் 759,கிராமங்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் கிராமங்களுக்கு வழங்கப்பட்டால் திருப்பத்தூர் மாவட்டத்தில் குடிநீர் பஞ்சம் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் திருப்பத்தூருக்கு இணைப்பு வழங்கப்படுவதால் நடவடிக்கை
    • குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி தகவல்

    வேலூர்:

    வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மேட்டூரில் இருந்து காவேரி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. மேட்டூரில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 759 கிராமங்களுக்கு குடிநீர் வழங்க பிராதான குழாயில் இணைப்பு வழங்க பணி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பணியை தொடங்கி உள்ளது. இதனால் ஜோலார்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு குடிநீர் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    அதுவரை உள்ளூரில் கிடைக்கும் குடிநீர் ஆதாரத்தை வைத்து பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிவடைந்த பின்னர் வழக்கம் போல் குடிநீர் சப்ளை செய்யப்படும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • குடிநீர் வீணாகியது
    • சரி செய்யும் பணி தீவிரம்

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இங்கு சுமார் 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உள்ளனர்.

    இப்பகுதி மக்களுக்காக காவிரி கூட்டு குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு பேரூராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

    வாணியம்பாடி நகர பகுதியில் இருந்து குடிநீர் குழாய் மூலம் பாலாறு படுகையோரம் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு பாலாறு வழியாக உதயேந்திரம் பேரூராட்சிக்கு குடிநீர் குழாய் எடுத்து செல்லப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த 10 நாட்களாக பெய்த கன மழை காரணமாக பாலாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.

    இதில் உதயேந்திரம் பேரூராட்சிக்கு செல்லக்கூடிய குடிநீர் குழாய்கள் அடித்து செல்லப்பட்டது. இதனால் பல நாட்களாக காவிரி கூட்டு குடிநீர் பாலாற்றில் வீணாக சென்றது.

    இன்று காலையில் பாலாற்றில் நீர் வரத்து குறைந்தது. குடிநீர் குழாயை பேரூராட்சி அதிகாரிகள் பாலாற்று வெள்ளத்தில் இருந்து எடுத்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×