search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    759 கிராமங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் விரைவில் விநியோகம்
    X

    திருப்பத்தூர் புதுப்பேட்டை மெயின் ரோட்டில் காவிரி கூட்டுக் குடிநீர் கிராம ஊராட்சிகளுக்கு வழங்கும் பணியை மேற்பார்வை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி ஆய்வு செய்த போது எடுத்த படம்.

    759 கிராமங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் விரைவில் விநியோகம்

    • ரூ.144.21 கோடியில் திட்டம்
    • குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் தகவல்

    திருப்பத்தூர்:

    குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியங்களில் 50 ஊராட்சிகளில், 759 கிராமங்கள் பயன்பெறும் வகையில் காவிரி கூட்டு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு வேலூர் மாவட்ட கூட்டுக் குடிநீர் திட்ட 1500 அடி விட்டம் கொண்ட ராட்சச பிரதான குழாயில் இருந்து இணைக்கும் திட்ட பணிகள் நடந்து வருகிறது.

    திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு கூட்ரோடு அருகே சுமார் 10 அடி ஆழத்தில் உள்ள குழாய்களில் இருந்து ஊராட்சிகளுக்கு செல்லும் குழாய்களில் இணைக்கும் பணி பொக்லைன் எந்திரம் கொண்டு பள்ளம் தோண்டப்பட்டு கடந்த இரண்டு நாட்களாக இரவு, பகலாக நடந்து வருகிறது.

    இத்திட்ட பணியை குடிநீர் வடிகால் வாரியமேற்பார்வை பொறியாளர்.கிருஷ்ணமூர்த்தி, பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    வேலூர் கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு, மேட்டூர் வழியாக ராட்சச பைப்புகள் அமைக்கப்பட்டு திருப்பத்தூர், ஜோலார்பேட்டை வாணியம்பாடி, , ஆம்பூர், வேலூர், ராணிப்பேட்டை, அரக்கோணம் வரை செல்கிறது.

    இந்த திட்டத்தை தமிழக அரசு விரிவுபடுத்தப்பட்டு ரூ.144.21 கோடி மதிப்பில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி, நாட்றம்பள்ளி, ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 50 பஞ்சாயத்துகள், 759, குக்கிராமங்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் வழங்கப்பட உள்ளது.

    இதற்கான பிரதான குழாய்களில் இருந்து ஊராட்சிகளுக்கு செல்லும் குழாய்களுடன் இணைக்கும் பணிகள் திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு கூட்ரோடு அருகே 4 வழி சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு இரவு பகலாக பணிகள்நடைபெற்று வருகிறது.

    பணிகள் முடிவடைந்ததும் தேசிய நெடுஞ்சாலையில் தார் சாலை தோண்டப்பட்ட பள்ளங்களும் மூடி புதிய தார்சாலை அமைத்து தரப்படும் இன்னும் 2 நாட்களுக்குள் பணிகள் முழுமையடையும் தற்போது ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்கும் பணி 88 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது.

    3 மாத காலத்திற்குள் ஊராட்சிகளுக்கு காவிரி குடிநீர் கிடைக்கும். என தெரிவித்தார். அப்போது நிர்வாக பொறியாளர்.மாணிக்கம், உதவி நிர்வாக பொறியாளர்கள் பற்குணன், தேசிங்குராஜா, மற்றும் உதவி பொறியாளர் பிரகாசம் ஆகியோர் உடன் இருந்தனர்.

    50 பஞ்சாயத்துக்கள் 759,கிராமங்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் கிராமங்களுக்கு வழங்கப்பட்டால் திருப்பத்தூர் மாவட்டத்தில் குடிநீர் பஞ்சம் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×