search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காளமேகம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அப்போதில் இருந்து அவன் பாடத் தொடங்கினான். பல்லோராலும் பாராட்டப்படும் கவிஞன் ஆனான்.
    • அவனே 15&ம் நூற்றாண்டில் ஒப்பாரும் மிக்காரும் இன்றி வாழ்ந்த சிலேடைப் புலவன் கவிகாளமேகம்.

    அகிலாண்டேசுவரியின் பெருமைக்கும், சக்திக்கும் சான்றாக விளங்கியவர் கவிகாளமேகம்.

    அவர் ஸ்ரீவைஷ்ணவர், ஸ்ரீரங்கம் பெரிய கோவில் மடப்பள்ளியில் சமையல்காரராக பணிபுரிந்து வந்தார்.

    அவர் ஒருநாள் ஜம்புகேசுவரத்தில் உள்ள தனது ஆசைநாயகியின் வீட்டிற்கு வந்தார்.

    அவள் அகிலாண்ட நாயகியின் சன்னதியில் நடனமாடுபவள்.

    அவளுக்காக வாயிலில் காத்திருந்தவர் சன்னதியின் கோபுர வாயிலில் படுத்து தூங்கி விட்டார்.

    ஓர் அந்தணன் ஒரு புகழ்பெற்ற கவியாக விரும்பினான். அவன் அகிலாண்டேசுவரியின் பரமபக்தன்.

    அவன் அன்னையைக் குறித்து தவம் இருந்தான். அன்னை அவன் தவத்துக்கு மகிழ்ந்து அருள்புரிய எண்ணினாள்.

    அவள் கண்டவர் மயங்கக்கூடிய அழகிய பருவ மங்கையாக உருமாறி தவம் செய்யும் அந்தணனை நோக்கி வந்தாள்.

    அவள் தரித்திருந்த தாம்பூலத்தை அவன் வாயில் உமிழக் குனிந்த போது அந்தணன் அவளது சவுந்தரிய வல்லமையைக் கண்டு பயந்தான்.

    யாரோ மனதைக் கெடுக்கும் மோகினியோ என்று வெறுத்து ஒதுங்கினான்.

    "சீ போ போ" என்று விரட்டினான்.

    அன்னை அகிலாண்டேஸ்வரி கோபம் அடைந்தாள்.

    தவத்தின் பலன் கிடைக்கப் பெறாத துர்ப்பாக்கியசாலி என்று அங்கிருந்து வெளிப்புறம் வந்து தாம்பூல எச்சிலை உமிழ்ந்தாள்.

    அங்கு வாயைத் திறந்து படுத்திருந்த ஸ்ரீரங்கம் பெரிய கோவில் சமையல்காரர் வாயில் அது விழுந்தது.

    அவர் கோவில்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுடையவர்.

    "கோவில் பாழ்படாமல் இருக்க, எந்த தியாகத்தையும் செய்வேன், பெண்ணே! தாராளமாக என் வாயில் உமிழ்ந்து கொள்," என்றார்.

    அம்பாளும் அப்படியே செய்ய, அவர் பிரபலமான கவியானார். அவரே காளமேகப் புலவர் என பிற்காலத்தில் அழைக்கப்பட்டார்.

    அவன் கண் விழித்தன்.

    அவனை அன்னை ஆட்கொண்டதாக உணர்ந்தான்.

    அப்போதில் இருந்து அவன் பாடத் தொடங்கினான். பல்லோராலும் பாராட்டப்படும் கவிஞன் ஆனான்.

    அவனே 15&ம் நூற்றாண்டில் ஒப்பாரும் மிக்காரும் இன்றி வாழ்ந்த சிலேடைப் புலவன் கவிகாளமேகம்.

    காளமேகம் பாடிய அனைத்துப் பாடல்களும் சுவை மிகுந்தவை. சாகா வரம் பெற்றவை.

    இந்த நிகழ்வின் அடிப்படையில், சிறந்த கல்வியறிவு, கலைஞானம் பெற அம்பாளுக்கு தாம்பூலம் படைத்து வழிபடுகின்றனர்.

    ×