search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்நடை ஆய்வாளர் சங்கம்"

    • 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
    • கால்நடை பராமரிப்பு துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    தஞ்சை மாவட்ட செயலாளர் முத்துராஜா தலைமை தாங்கினார்.

    போராட்டத்தை மாநில செயலாளர் தமிழ்வாணன் தொடங்கி வைத்தார்.

    கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட செயலாளர்கள் ராமச்சந்திரன் ( திருவாரூர் ), சங்கர் (நாகை) ஆகியோர் விளக்க உரையாற்றினர்.

    மாவட்ட இணை செயலாளர்கள் ராஜா, குருநாதன், கோவிந்தராஜன், கோட்டச் செயலாளர்கள் ஜெகதீஷ், டோனிபிரிட்மேன், சந்துரு, முருகேஷ், தனசேகர், மோகன்ராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கால்நடை ஆய்வாளர் பயிற்சி போர்க்கள அடிப்படையில் தொடங்கி கால்நடை பராமரிப்பு துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    தேர்தல் வாக்குறுதிபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர்களுக்கு அடுத்த கட்ட பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்த ப்பட்டது.

    இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் கோதண்டபாணி, சத்துணவு ஊழியர் சங்கம் ரவிச்சந்திரன், கால்நடை ஆய்வாளர் சங்கம் கௌரவ ஆலோசகர் துரைசாமி மற்றும் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தை கால்நடை ஆய்வாளர் சங்கம் ( ஓய்வு ) மாநில செயலாளராக ஆறுமுகம் முடித்து வைத்து சிறப்புரையாற்றினார்.

    முடிவில் மாவட்ட மகளிரணி செயலாளர் அந்தோணி ஜெயந்தி நன்றி கூறினார்.

    ×