என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » காரிமங்கலம் கொள்ளை
நீங்கள் தேடியது "காரிமங்கலம் கொள்ளை"
காரிமங்கலம், பாலக்கோட்டில் கோவில், கடைகளில் நகை - பணம் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போனது.
காரிமங்கலம்:
காரிமங்கலம் அருகே உள்ள பூலாப்பட்டி ஆற்றங்கரையில் சிவன் மற்றும் முருகன் கோவிலில் நேற்று முன்தினம் பூசாரி பூஜையை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை பொதுமக்கள் கோவிலுக்கு சென்றபோது கதவு திறந்து இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது சாமி கழுத்தில் இருந்த தங்க நகை, உண்டியல் பணம் மற்றும் கோவில் வளாகத்தில் இருந்த 3 வெண்கல மணிகள் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார்விசாரித்து வருகின்றனர்.
பாலக்கோடு அருகே உள்ள சோமனஅள்ளியை சேர்ந்தவர் நாச்சியப்பன் (வயது25). இவர் பாலக்கோடு மெயின் ரோட்டில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை அவர் கடையை திறந்து உள்ளே சென்ற போது மர்மநபர் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி செல்போன்கள், மெமரி கார்டுகள், பணம் ஆகியவற்றை திருடி சென்றது தெரிந்தது. இதேபோன்று அருகில் உள்ள மணி என்பவருக்கு சொந்தமான போட்டோ ஸ்டுடியோவின் மேற்கூரையை உடைத்து மர்ம நபர் கேமரா, பிளாஷ் லைட் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றார். இதுகுறித்து அவர்கள் 2 பேரும் பாலக்கோடு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X