search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karimangalam robbery"

    காரிமங்கலம், பாலக்கோட்டில் கோவில், கடைகளில் நகை - பணம் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போனது.
    காரிமங்கலம்:

    காரிமங்கலம் அருகே உள்ள பூலாப்பட்டி ஆற்றங்கரையில் சிவன் மற்றும் முருகன் கோவிலில் நேற்று முன்தினம் பூசாரி பூஜையை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை பொதுமக்கள் கோவிலுக்கு சென்றபோது கதவு திறந்து இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது சாமி கழுத்தில் இருந்த தங்க நகை, உண்டியல் பணம் மற்றும் கோவில் வளாகத்தில் இருந்த 3 வெண்கல மணிகள் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார்விசாரித்து வருகின்றனர்.

    பாலக்கோடு அருகே உள்ள சோமனஅள்ளியை சேர்ந்தவர் நாச்சியப்பன் (வயது25). இவர் பாலக்கோடு மெயின் ரோட்டில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை அவர் கடையை திறந்து உள்ளே சென்ற போது மர்மநபர் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி செல்போன்கள், மெமரி கார்டுகள், பணம் ஆகியவற்றை திருடி சென்றது தெரிந்தது. இதேபோன்று அருகில் உள்ள மணி என்பவருக்கு சொந்தமான போட்டோ ஸ்டுடியோவின் மேற்கூரையை உடைத்து மர்ம நபர் கேமரா, பிளாஷ் லைட் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றார். இதுகுறித்து அவர்கள் 2 பேரும் பாலக்கோடு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    ×