search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காமராஜர் வெண்கல சிலை"

    • 121 பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து காமராஜரின் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • நிகழ்ச்சியில் காமராஜர் சிலையை தனது சொந்த செலவில் வழங்கிய விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டார்

    ஆலங்குளம்:

    தென்காசி-நெல்லை நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வரு கிறது. இதனால் ஆலங்குளம் பஸ் நிலையம் எதிர்புறம் உள்ள காமராஜர் சிலை அகற்றப்பட உள்ளது. இதை யடுத்து பஸ் நிலையத்தின் கீழ்புறம் புதிய சிலையை அமைப்பதற்கு அரசு இடம் ஒதுக்கீடு செய்தது.

    அந்த இடத்தில் புதிய வெண்கல சிலை அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா காமராஜர் பிறந்த நாளான நேற்று நடந்தது. விழாவுக்கு முன்னாள் எம்.பி. ராமசுப்பு தலைமை தாங்கினார். ஆலங்குளம் பேருராட்சி துணைத்தலைவர் எஸ்.டி.ஜான்ரவி, தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளர் எம்.எஸ். காமராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி கவுன்சிலர் டி.சாலமோன் ராஜா வரவேற்றார்.

    தொடர்ந்து கல்வி கண் திறந்த காமராஜரின் புதிய வெண்கல சிலையை ஆலங்குளம் டி.டி.ஏ. பள்ளி மாணவ, மாணவிகள் திறந்து வைத்தனர். சிறப்பு விருந்தின ராக தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு திறப்பு விழாவிற்கு வந்திருந்த வர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

    மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., பழனி நாடார் எம்.எல்.ஏ., தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கன்னியாகுமரி மண்டல தலைவர் டி.பி.வி. வைகுண்ட ராஜா, ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணி கண்டன், தமிழ் செல்வி போஸ், பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால், ஆலடி எழில்வாணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினர்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி மாவட்ட தலைவர் டி.பி.வி. கருணாகரராஜா, தொழிலதிபர் கோல்டன் செல்வராஜ், காமராஜர் சிலை அமைப்பு மற்றும் பராமரிப்பு கமிட்டி பொருளாளர் பர்வீன்ராஜ், மூத்த வழக்கறிஞர் பால கணேசன், நகர வியாபாரிகள் சங்க தலைவர் சண்முக சுந்தரம், நகர ஹோட்டல் உரிமையாளர் சங்கம் உதயராஜ், நகர நாடார் சங்க தலைவர் தூசி. செல்வராஜ், ஓ.பி.சி. பிரிவு மாநிலத் தலைவர் ஞானபிரகாஷ், சுபாஷ் சந்திரபோஸ், நகர தலைவர் தாமஸ், வட்டார தலைவர் ரூபன், ச.ம.க. நகர தலைவர் ஜெயபாலன், லிங்கராஜா, முன்னாள் கவுன்சிலர் ராஜதுரை, அருணாச்சலம், முன்னாள் பேரூராட்சி துணை சேர்மன் தங்க செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக ஆலங்குளம் காய்கறி மார்க்கெட்டில் உள்ள ஸ்ரீஅரசடி வெற்றி விநாயகர் கோவிலில் இருந்து நெல்லை பேட்டையை சேர்ந்த ஜாண்பாவா சிலம்பாட்ட குழுவினரின் சிலம்பாட்ட நிகழ்ச்சியோடு 121 பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து காமராஜரின் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின் யூனியன் சேர்மன் திவ்யா மணி கண்டன் தலை மையில் 121 முளைப்பாரி மற்றும் பொய்க்கால் குதிரை, கரகாட்டத்துடன், தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக வந்து புதிய சிலையை அலங்கரித்தனர். இரவில் இன்னிசை கச்சேரி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காமராஜர் சிலையை தனது சொந்த செலவில் வழங்கிய விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டார். இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த வாலி பர்கள், இளம்பெண்கள், முதிய வர்கள் என திரளா னவர்கள் வந்து ரசித்தனர்.

    காமராஜரின் புதிய வெண்கல சிலை திறக்கப்படுவதை அறிந்த பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரு மான கமலஹாசன் கட்சியி ன் மாவட்ட நிர்வாகி யான தொழி லதிபர் கருணாக ரராஜா மூலமாக வாழ்த்து மடல் ஒன்றை அனுப்பியி ருந்தார். முடிவில் வட செ ன்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.எஸ். திரவியம் நன்றி கூறினார்.

    இந்த விழாவில் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற துணைத் தலைவர் சிவ அருணன், முதல் வகுப்பு அரசு ஒப்பந்த தாரர் கரையாளனூர் சண்முகவேல், தொழில திபர்கள் மணிகண்டன், மோகன்லால், தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் செல்வ மோக ன்தாஸ் பாண்டியன், மாவட்ட ஜெயலலிதா பேர வை செயலாளர் பிரபா கரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் மற்றும் திரளான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.


    காமராஜர் சிலைக்கு ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி.

    காமராஜர் சிலைக்கு ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி.


     


    ×