search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதலியை ஏமாற்றியவர்"

    • சத்தியபாமா என்பவர் தனது மாமா ராமு என்பவரின் மகன் மணி (30) பொறியியல் பட்டதாரி என்பவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
    • சத்தியபாமா விடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்தார்,

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே காரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மகள் சத்தியபாமா (வயது 22) பி.எஸ்.சி. படித்துவிட்டு சென்னையில் லேப் டெக்னீஷனாக பணிபுரிந்து வருகிறார்  இவர் தியாகதுரும் அருகே வேளானந்தல் கிராமத்தைச் சேர்ந்த தனது மாமா ராமு என்பவரின் மகன் மணி (30) பொறியியல் பட்டதாரி என்பவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் தொலை பேசியிலும், தனிமையிலும் சந்தித்தும் பேசி வந்துள்ளனர்.

    மேலும் ராமு அவ்வப்போது காரனூர் கிராமத்திற்கு சென்று தனிமையில் இருக்கும்போது சத்தியபாமா விடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று சத்தியபாமா வின் தந்தை, தாய் மற்றும் உறவினர்கள் வேளானந்தல் கிராமத்தில் உள்ள மணி வீட்டிற்க்கு சென்று நிச்சயதார்த்தம் குறித்து பேசி உள்ளனர். அப்பொழுது வீட்டில் இருந்த மணி இவரின் தாய் சாந்தா (58), அக்காள்கள் தீபா (32), வெண்ணிலா ஆகியோர் இவர்களை திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து சத்தியபாமா கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மணி, சாந்தா, தீபா, வெண்ணிலா ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து மணியை கைது செய்தனர்.

    ×