search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதலி பேச மறுப்பு"

    காதலி பேசாததால் விரக்தியில் கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு சம்பவத்தில் மூதாட்டி சாணிப்பவுடர் குடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    சிங்காநல்லூர்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டிக்கடை பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மகன் சக்திவேல்(வயது 29). இவர் கோவை சிங்காநல்லூரில் உள்ள வசந்தாநகரில் தங்கியிருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.

    இவர் அதே ஊரை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்தார். கோவை வந்த பின்பு அந்த பெண்ணிடம் போனில் பேசி வந்துள்ளார்.

    ஆனால் கடந்த சில நாட்களாக அந்த பெண் சக்திவேலிடம் பேசவில்லை. இதனால் விரக்தியடைந்த அவர் தான் தங்கியிருந்த வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து சிங்கா நல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் கோவை சிங்காநல்லூர் நீலிகோணாம்பாளையம் வடக்கு வீதியை சேர்ந்தவர் அம்மாசையம்மாள் (80). இவருக்கு 2 மகள், 2மகன் உள்ளனர். கணவர் இறந்து விட்டதால் மகன் வீட்டில் வசித்து வந்தார்.

    நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென சாணிப்பவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×