search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காட்டுபன்றிகள்"

    திருமானூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயத்தை அழிக்கும் காட்டுபன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், விழுப்பணங்குறிச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிளை துணைச் செயலாளர் முருகேசன், கலிய மூர்த்தி, பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    கூட்டத்தில் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் கட்சியினருக்கு, கட்சி உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கி கட்சியின் மாவட்ட முடிவுகளை விளக்கியும் கட்சியின் செயல்பாடுகள், வளர்ச்சி குறித்து பேசினார். 

    மேலும் கூட்டத்தில்  கட்சியின் வளர்ச்சி நிதியை வரும் 25-ந் தேதிக்குள் வசூல் செய்து மாவட்ட கமிட்டியிடம்  கொடுப்பது, விழுப்பணங்குறிச்சியில் இருந்து பாட்சா நகர் செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தார் சாலையாக மாற்றி அமைக்க வேண்டும், விவசாயத்தை அளிக்கும் காட்டுபன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், புள்ளம்பாடி வாய்க்காலில்  பாசனத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கட்சியினர் கலந்து கொண்டனர்.
    ×