search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரஸ் கொடி"

    • கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அதில் கொடியேற்றி வைத்தார்.
    • சண்முகம் ஆகியோர் குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி பஸ் நிலையம் அருகே காமராஜரின் முழு உருவச் சிலை உள்ளது. அதன் அருகே சமீபத்தில் பாரத் ஜோரா யாத்திரையின் நினைவு கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அதில் கொடியேற்றி வைத்தார். அதன் அருகே வேறு சில கட்சிகளின் கொடிக்கம்பங்களும் உள்ளன.இந்த நிலையில் நேற்று மர்ம நபர்கள் காங்கிரஸ் கொடியை கம்பத்திலிருந்து அகற்றி கிழித்து தீ வைத்து எரித்துள்ளனர். இன்று காலை இதனைப் பார்த்த காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர் .

    இது குறித்து நகர காங்கிரஸ் தலைவர் வைத்தியநாதன், மாவட்ட செயலாளர் சிவராஜ் சண்முகம் ஆகியோர் குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். சப்- இன்ஸ்பெக்டர் பிரசன்ன குமார் விசாரணை நடத்தி வருகிறார். நாளை காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கொடி அறுக்கப்பட்டு எரிக்கப்பட்டது பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

    ×