என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கவுன்சிலர்கள் வெளிநடப்பு"
- தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற கூட்டம் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
- வார்டு பகுதியில் அடிப்படை பணிகள் எதுவும் இதுவரை நடக்கவில்லை என்றும் மாதந்தோறும் நகராட்சி கூட்டம் நடத்தவில்லை என்பதை கண்டித்து கூட்டத்தில் இருந்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தேனி:
தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற கூட்டம் தலைவர் ரேணுபிரியா பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. துணைத்த லைவர் செல்வம், நகராட்சி ஆணையாளர் (பொ) பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் பால முருகன், கடவுள், நாராயண பாண்டியன், விஜயன், ராஜ்குமார், தினேஷ்குமார், மணிகண்டன், சந்திரமோகன், கிருஷ்ண குமாரி, ஆனந்தி, சரஸ்வதி, சங்கீதா மற்றும் சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம், நகர அமைப்பு அலுவலர் சலார் அப்துல் நாசர் உள்பட கவுன்சிலர்கள், நகராட்சி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கவுன்சிலர் நாகராஜ், நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படு த்தாத வகையில் காலதாமதம் இன்றி வரிகளை விதிக்க பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
அதுபோல கவுன்சிலர்கள் நாராயண பாண்டியன், ராஜ்குமார் மற்றும் பெரு ம்பாலான கவுன்சிலர்கள் பேசுகையில், தேனி நகரில் உள்ள வாரச்சந்தை குத்தகை ஏலம் குறைந்த தொகைக்கு ஏலம் போயிருப்பதால் அந்த தீர்மானத்தை ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சங்கீதா, சரஸ்வதி, கிருஷ்ணபிரபா, பாப்பா, கிருஷ்ணவேணி மற்றும் பா.ஜ.க கவுன்சிலர் ஆனந்தி ஆகியோர் வார்டு பகுதியில் அடிப்படை பணிகள் எதுவும் இதுவரை நடக்கவில்லை என்றும் மாதந்தோறும் நகராட்சி கூட்டம் நடத்தவில்லை என்பதை கண்டித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதனை அடுத்து வெளிநடப்பு செய்த கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலக நுழைவாயில் முன்பு இந்த கோரிக்கையை வலியுறுத்தி அடிப்படை பணிகளை நமக்கு நாமே திட்டத்தில் மேற்கொள்ள வேண்டுமென பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடம் நகராட்சி துணைத்தலைவர் செல்வம் மற்றும் நகராட்சி ஆணையாளர் பொறுப்பு பாலமுருகன், சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நகராட்சி பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
- தாமரைக்குளம் பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.
- கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்ததால் பேரூராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் பால்பாண்டி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மலர்கொடி சேதுராமன், செயல் அலுவலர் ஆளவந்தான் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தாமரைக்குளம் பேரூராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது, குடிநீர் தொட்டிகள் அமைப்பது, சாலை வசதிகளை விரிவாக்கம் செய்வது, பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என்று தீர்மானங்களை வாசித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென பேரூராட்சி கவுன்சிலர்கள் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து 1வது வார்டு வசந்தா, 3வது வார்டு முருகன், 5வது வார்டு பாண்டி, 6வது வார்டு மைதிலி அன்பழகன், 7வது வார்டு சாந்தி, 10வது வார்டு ஜாகிர்உசேன் உள்ளிட்ட 6 உறுப்பினர்கள் தங்களது பகுதிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரவில்லை என்றும், வார்டு உறுப்பினர்களுக்கு தெரியாமல் நிகழ்ச்சிகள் நடைபெறுவதாகவும், செயல் அலுவலர் மோசடி செய்து முறைகேட்டில் ஈடுபடுவதாகவும், தன்னிச்சையாக செயல்படுவதாகவும் கூறி வெளிநடப்பு செய்தனர்.
கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்ததால் பேரூராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்