search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Municipal Assembly"

    • விருதுநகரில் 15 ஆண்டுகளாகியும் பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக முடியவில்லை.
    • சட்டமன்ற உறுதி மொழிக்குழு மார்ச் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தியது.

    விருதுநகர்

    விருதுநகர் நகராட்சி கூட்டம் தலைவர் மாதவன் தலைமையில் நடைபெற்றது. இதில் துணைத் தலைவர் தனலட்சுமி, கமிஷனர் லீனாசைமன், பொறியாளர் எட்வின் பிரைட்ஜோஸ் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியவுடன் கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினார்.

    அப்போது விருதுநகரில் பாதாள சாக்கடை திட்டத் திற்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்பட வில்லை. தற்போது பல இடங்களில் சாக்கடை நிரம்பி கழிவுகள் வெளியேறுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இதற்கு கமிஷனர் லீனாசைமன் பதிலளித்து பேசுகையில், விருதுநகர் நகராட்சியில் பாதாள சாக்கடை இணைப்பு 12 ஆயிரம் வீடுகளுக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் எத்தனை வீடு களுக்கு இணைப்பு கொடுக்க வேண்டுமென்ற தகவல்கள் இல்லை. பெரும்பாலானோர் டெபாசிட் தொகை செலுத்தவில்லை. ஆனாலும் அவர்களுக்கும் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முழுமையாக முடியவில்லை. அண்மை யில் விருதுநகரில் ஆய்வு செய்த சட்டமன்ற உறுதி மொழிக்குழு மார்ச் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. அதற்கான நட டிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

    கவுன்சிலர் ராமச்சந்திரன் பேசுகையில், எனது வார்டில் 73 வீட்டின் உரிமைதாரர்கள் டெபாசிட் தொகை கட்டி உள்ளனர். ஆனால் தற்போது வரை பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கவில்லை. எனவே டெபாசிட் பணத்தை திருப்பி தரவேண்டும் என்றார்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    கடந்த 2008-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போது பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டது. 15 ஆண்டுகள் ஆகியும் இந்த திட்டம் தற்போது வரை முடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற கூட்டம் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
    • வார்டு பகுதியில் அடிப்படை பணிகள் எதுவும் இதுவரை நடக்கவில்லை என்றும் மாதந்தோறும் நகராட்சி கூட்டம் நடத்தவில்லை என்பதை கண்டித்து கூட்டத்தில் இருந்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    தேனி:

    தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற கூட்டம் தலைவர் ரேணுபிரியா பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. துணைத்த லைவர் செல்வம், நகராட்சி ஆணையாளர் (பொ) பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் பால முருகன், கடவுள், நாராயண பாண்டியன், விஜயன், ராஜ்குமார், தினேஷ்குமார், மணிகண்டன், சந்திரமோகன், கிருஷ்ண குமாரி, ஆனந்தி, சரஸ்வதி, சங்கீதா மற்றும் சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம், நகர அமைப்பு அலுவலர் சலார் அப்துல் நாசர் உள்பட கவுன்சிலர்கள், நகராட்சி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கவுன்சிலர் நாகராஜ், நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படு த்தாத வகையில் காலதாமதம் இன்றி வரிகளை விதிக்க பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    அதுபோல கவுன்சிலர்கள் நாராயண பாண்டியன், ராஜ்குமார் மற்றும் பெரு ம்பாலான கவுன்சிலர்கள் பேசுகையில், தேனி நகரில் உள்ள வாரச்சந்தை குத்தகை ஏலம் குறைந்த தொகைக்கு ஏலம் போயிருப்பதால் அந்த தீர்மானத்தை ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சங்கீதா, சரஸ்வதி, கிருஷ்ணபிரபா, பாப்பா, கிருஷ்ணவேணி மற்றும் பா.ஜ.க கவுன்சிலர் ஆனந்தி ஆகியோர் வார்டு பகுதியில் அடிப்படை பணிகள் எதுவும் இதுவரை நடக்கவில்லை என்றும் மாதந்தோறும் நகராட்சி கூட்டம் நடத்தவில்லை என்பதை கண்டித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    இதனை அடுத்து வெளிநடப்பு செய்த கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலக நுழைவாயில் முன்பு இந்த கோரிக்கையை வலியுறுத்தி அடிப்படை பணிகளை நமக்கு நாமே திட்டத்தில் மேற்கொள்ள வேண்டுமென பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடம் நகராட்சி துணைத்தலைவர் செல்வம் மற்றும் நகராட்சி ஆணையாளர் பொறுப்பு பாலமுருகன், சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நகராட்சி பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • கல்லம்பாளையம் பகுதியில் குடிநீர் மற்றும் சப்பை தண்ணீர் விநியோகம் செய்ய ஒரே ஒரு பணியாளர் உள்ளார்.
    • நகராட்சி சார்பில் நடைபெறும் விழாக்களுக்கு, நகர்மன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு இல்லை.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி சாதாரணக் கூட்டம் நகராட்சி தலைவர் கவிதாமணி தலைமையில் கூட்டரங்கில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் விநாயகம் முன்னிலை வகித்தார்.இந்த கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் பின் வருமாறு:- பாலகிருஷ்ணன், (தி.மு.க.):- கல்லம்பாளையம் பகுதியில் குடிநீர் மற்றும் சப்பை தண்ணீர் விநியோகம் செய்ய ஒரே ஒரு பணியாளர் உள்ளார். அவரையும் வரி வசூல் செய்ய அழைத்து விடுகின்றீர்கள். அதனால், தண்ணீர் சப்ளை பாதிக்கிறது .எனவே கூடுதல் ஆட்களை நியமிக்க வேண்டும்.

    ராஜசேகரன், (தி.மு.க.):- நகராட்சி சார்பில் நடைபெறும் விழாக்களுக்கு, நகர் மன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு இல்லை. சென்ற வாரத்தில் நகராட்சி கூட்ட அரங்கில், அமைச்சர் கலந்து கொண்ட விழா நடைபெற்றது. அதற்கு அழைப்பு இல்லை. பெரிய திட்டப் பணிகள் நடைபெறும் போது அதன் துவக்க விழாவிற்கும் அழைப்பு விடுப்பதில்லை. மக்கள் பிரதிநிதிகளான எங்களை ஏன் புறக்கணிக்கிறீர்கள். நகராட்சி தலைவர் கவிதா மணி : இனி இது போல் நடக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த கூட்டத்திற்கு கருப்பு சட்டை அணிந்து வந்த 6 வது வார்டு கவுன்சிலர் ஈஸ்வரமூர்த்தி : - ராகுல் காந்தியை பதவி நீக்கம் செய்ததை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளேன். என்று பேசினார் அப்போது இடைமறித்த 18 வது வார்டு பாஜக. நகர்மன்ற உறுப்பினர் சசிரேகா, நகர்மன்ற கூட்டத்தில் உள்ளூர் விஷயத்தை பேசுங்கள் என கூறினார். இதற்கு பதில் அளித்த ஈஸ்வரமூர்த்தி பிரதமருக்கு நன்றி தெரிவித்து நீங்கள் இந்த கூட்டத்தில் பேசலாமா, நான் எனது கருத்தை இங்கு பதிவு செய்வதற்கு உரிமை உள்ளது என இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நகராட்சி ஆணையாளர் விநாயகம் இருவரையும் சமரசம் செய்தார். பின்னர் 12 வது வார்டு அண்ணா நகரில் ரூ.15 லட்சம் செலவில் கழிவு நீர் சுத்திகரிப்பு தொட்டி அமைப்பது உள்ளிட்ட 68 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ×