search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளநோட்டு கைது"

    • தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கிருஷ்ணாநகர் பகுதியில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது.
    • போலீசார் டைல்ஸ் கடை உரிமையாளர் கோகுல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கிருஷ்ணாநகர் பகுதியில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் முன்பாக உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருவர் 8 எண்ணிக்கையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை செலுத்தினார். இது குறித்து வங்கியின் நோடல் அலுவலர் கார்த்திக் போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் வங்கிக்கு செலுத்தப்பட்ட 500 ரூபாய் கள்ள நோட்டுகள் குறித்து வங்கி நிர்வாகத்தினர் கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்தனர். கள்ள நோட்டுகளில் சீரியல் எண்கள் மாற்றப்பட்டுள்ளதை வைத்து வங்கி அதிகாரிகளால் அவை கள்ள நோட்டுகள் என உறுதி செய்யப்பட்டது. இந்த நோட்டுகளை செலுத்தியவர் தேவாரம் மெயின் ரோட்டில் டைல்ஸ் கடை நடத்தி வரும் கோகுல் என தெரிய வந்தது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    இதனையடுத்து போலீசார் டைல்ஸ் கடை உரிமையாளர் கோகுல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் தன்னை தேடி வருவதை அறிந்ததும் கோகுல் தலைமறைவானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கம்பத்தில் ஒரு வீட்டில் கள்ள நோட்டுகள் அச்சடித்த கும்பல் சிக்கினர். தற்போது வங்கி ஏ.டி.எம்.மில் தொழிலதிபரே 500 ரூபாய் கள்ள நோட்டுகளை செலுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் வீடியோக்களை பார்த்து கள்ள நோட்டுகளை அச்சடிக்க விரும்பினார்.
    • ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற சிரமம் என்பதால் அதனை அச்சடிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், கே.கோட்டூரை சேர்ந்தவர் கோபால் (வயது 41) 7-ம் வகுப்பு வரை படித்துள்ளார். சில ஆண்டுகள் பெங்களூரில் உள்ள அச்சகத்தில் வேலை செய்து வந்தார்.

    தற்போது வார சந்தைகளுக்கு சென்று டீ விற்று வருகிறார். போதைக்கு அடிமையான கோபால், எளிதாக பணம் சம்பாதிப்பது எப்படி என்று யூடியூப் வீடியோக்களை பார்த்து வந்தார்.

    கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் வீடியோக்களை பார்த்து கள்ள நோட்டுகளை அச்சடிக்க விரும்பினார்.

    பெங்களூரு சென்று கலர் பிரிண்டர், தடிமனான வெற்று பாண்ட் பேப்பர்கள், கலர்கள், பச்சை கலர் நெயில் பாலிஷ் வாங்கி வந்தார். 6 மாதங்கள் வீட்டில் ரகசியமாக ரூ.500, ரூ.200, ரூ.100 நோட்டுகளை அச்சடித்து வந்தார். ரூ.500 நோட்டுகளில் பாதுகாப்பு இழைக்கு பச்சை நிற நெயில் பாலிஷ் பூசினார்.

    அச்சடிக்கப்பட்ட இந்த நோட்டுகளை வாரச்சந்தையில் புழக்கத்தில் விட்டு வந்தார். கோபால் வழக்கமாக வார சந்தைகளில் டீ விற்பதால் அவர் கொடுத்த ரூபாய் நோட்டுகள் மீது கடைக்காரர்களுக்கு எந்த சந்தேகமும் வரவில்லை.

    இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கோபால் வீட்டில் அச்சடிக்கப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுகளை சந்தைகளில் புழக்கத்தில் விடுவதை தொடர்ந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு, ஊரில் உள்ள காய்கறி கடையில் ரூ.500 கொடுத்து ரூ.50 மதிப்புள்ள காய்கறிகளை வாங்கினார்.

    கோபால் கொடுத்த 500 ரூபாய் நோட்டின் மீது கடைக்காரருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து பலமனேர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கோபால் கொடுத்த 500 ரூபாய் நோட்டை வாங்கி பார்த்தார். அது போலி ரூபாய் நோட்டு என தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கோபாலை கைது செய்து, அவரது வீட்டில் இருந்து ரூ.8,200 மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுகள், பிரிண்டர் மற்றும் வெற்று வெள்ளை காகிதங்களை பறிமுதல் செய்தனர்.

    கோபால் கடந்த 6 மாதங்களாக எவ்வளவு கள்ள நோட்டுகளை அச்சடித்தார் எவ்வளவு கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டு உள்ளார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற சிரமம் என்பதால் அதனை அச்சடிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

    ×