search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்வி கடன் முகாம்"

    • வேலைக்கு சென்ற பின்பு திருப்பி செலுத்துவது கடமை
    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேச்சு

    வேலூர்:

    வேலூர் அடுக்கம்பாறை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் சிறப்பு கல்விக்கடன் முகாமை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் ஏற்கனவே கல்வி கடனுக்காக விண்ணப்பித்திருந்த 33 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 3.25 கோடி மதிப்பில் கல்வி கடனுதவிக்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார். அவர் பேசியதாவது:-

    உயர்கல்வி பயிலும் மாணவ மாணவியர்களின் பெற்றோர்களின் பொருளாதார சுமையை குறைக்கும் வகையில் வேலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வங்கிகள் மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து சிறப்பு கல்வி கடன் உதவி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    பல்வேறு கல்லூரிகளில் கல்வி கட்டணத்தை செலுத்தாத மாணவ, மாணவிகளை கல்லூரி நிர்வாகம் வெளியேற்றி விடுவதாக சமீப காலத்தில் ஒரு சில புகார்களும் வந்துள்ளன.

    ஏழை எளிய பெற்றோர்கள் தங்களின் குடும்ப சூழ்நிலையையும் தாங்கிக்கொண்டு மாணவர்களை உயர்கல்வி படிக்க வைக்கும் பொழுது கல்வி கட்டணம் செலுத்துவதில் சிரமங்கள் உள்ளன.

    இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இது போன்ற சிறப்பு கல்வி கடன் முகாம்கள் நடத்தப்படுகிறது.

    கல்லூரி பயிலும் போது கல்வி கடனை பெற்ற மாணவ மாணவியர்கள் தாங்கள் படித்து முடித்த பிறகு வேலைக்கு செல்லும் பொழுது இந்த கடனை வங்கிகளுக்கு திரும்ப செலுத்த வேண்டும்.

    எனவே கல்வி கடன் தேவைப்படுகின்ற மாணவ, மாணவிகள் இந்த சிறப்பு கல்வி கடன் முகாம்களை பயன்படுத்தி, வித்யாலட்சுமி போர்ட்டலில் விண்ணப்பித்து கடன் உதவி பெற்றுக் கொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, உதவி கலெக்டர் கவிதா, முன்னோடி வங்கி மேலாளர் ஜமாலுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு கல்வி கடன் முகாம் வருகிற 18-ந் தேதி மற்றும் 28-ந் தேதி ஆய்க்குடியில் நடைபெறுகிறது.
    • முகாமில் மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் உரிய ஆவணங்களுடன் பங்கு பெறலாம்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் சிறப்பு கல்வி கடன் முகாம் வருகிற 18-ந் தேதி மற்றும் 28-ந் தேதி அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஆய்க்குடி ஜே.பி.பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

    அனைத்து கலை, பட்டய பொறியியல், மருத்துவம் உள்பட அரசு அங்கீகாரம் பெற்ற 3 ஆண்டிற்கு மேற் பட்ட அனைத்து கல்லூரி படிப்பிற்கான கல்வி கடனை எதிர்நோக்கி காத்தி ருக்கும் மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் ஆதார் அட்டை நகல், ரேசன் கார்டு நகல், வாக்கா ளர் அடையாள அட்டை நகல், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் - 3, பான்கார்டு நகல், 10,11,12-ம் வகுப்பு மற்றும் தற்போது படித்துக் கொண்டு இருக்கும் மதிப்பெண் சான்றிதழ் நகல், சான்றுகளுடன் கலந்து கொள்ளலாம்.

    மேலும் பள்ளி மாற்று சான்றிதழ் நகல், வருமான சான்றிதழ் நகல், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று நகல், சாதி சான்றிதழ் நகல், இருப்பிட சான்றிதழ் நகல், கல்லூரி கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட (கவுன்சிலிங் சான்று) சேர்க்கைக்கான ஆவண நகல் கல்லூரி சேர்க்கை கடித நகல், கல்லூரி கட்டண விபரங்களுக்கான சான்று நகல் கல்லூரியின் அப்ரூவல் சான்று நகல் மற்றும் கல்வி கடன் பெறும் வங்கியின் பெயர், வங்கி கணக்கு எண், பாஸ்புக் நகலுடன் முகாம் நடைபெறும் இடத்திற்கு வந்து பயன் பெறலாம்.

    தென்காசி மாவட்ட அனைத்து வங்கி ஒருங்கி ணைப்பாளர்களும் தங்கள் கிளைகளில் பரிசீல னையில் உள்ள கல்வி கடன் விண்ணப்பத்தினையும் மற்றும் 28-ந் தேதி வரை நடைபெறும் கல்வி கடன் முகாமில் பெறப்படும் அனைத்து கல்வி கடன் விண்ணப்பத்தினையும் பரிசீலனை செய்து தென்காசி மாவட்ட கல்வி கடன் இலக்கினை அடைய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×