search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Education Loan Camp"

    • வேலைக்கு சென்ற பின்பு திருப்பி செலுத்துவது கடமை
    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேச்சு

    வேலூர்:

    வேலூர் அடுக்கம்பாறை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் சிறப்பு கல்விக்கடன் முகாமை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் ஏற்கனவே கல்வி கடனுக்காக விண்ணப்பித்திருந்த 33 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 3.25 கோடி மதிப்பில் கல்வி கடனுதவிக்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார். அவர் பேசியதாவது:-

    உயர்கல்வி பயிலும் மாணவ மாணவியர்களின் பெற்றோர்களின் பொருளாதார சுமையை குறைக்கும் வகையில் வேலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வங்கிகள் மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து சிறப்பு கல்வி கடன் உதவி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    பல்வேறு கல்லூரிகளில் கல்வி கட்டணத்தை செலுத்தாத மாணவ, மாணவிகளை கல்லூரி நிர்வாகம் வெளியேற்றி விடுவதாக சமீப காலத்தில் ஒரு சில புகார்களும் வந்துள்ளன.

    ஏழை எளிய பெற்றோர்கள் தங்களின் குடும்ப சூழ்நிலையையும் தாங்கிக்கொண்டு மாணவர்களை உயர்கல்வி படிக்க வைக்கும் பொழுது கல்வி கட்டணம் செலுத்துவதில் சிரமங்கள் உள்ளன.

    இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இது போன்ற சிறப்பு கல்வி கடன் முகாம்கள் நடத்தப்படுகிறது.

    கல்லூரி பயிலும் போது கல்வி கடனை பெற்ற மாணவ மாணவியர்கள் தாங்கள் படித்து முடித்த பிறகு வேலைக்கு செல்லும் பொழுது இந்த கடனை வங்கிகளுக்கு திரும்ப செலுத்த வேண்டும்.

    எனவே கல்வி கடன் தேவைப்படுகின்ற மாணவ, மாணவிகள் இந்த சிறப்பு கல்வி கடன் முகாம்களை பயன்படுத்தி, வித்யாலட்சுமி போர்ட்டலில் விண்ணப்பித்து கடன் உதவி பெற்றுக் கொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, உதவி கலெக்டர் கவிதா, முன்னோடி வங்கி மேலாளர் ஜமாலுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு கல்வி கடன் முகாம் வருகிற 29-ந் தேதி நடக்கிறது.
    • முகாமில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பரிசீலனை செய்து உடனடி கடன் ஆணைகளும் வழங்கப்படும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் இயங்கிவரும் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம் அனைத்து வட்டாரங்களிலும் வருகிற 29-ந்தேதி (செவ்வாய்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

    சிவகங்கை, காளையார்கோவில், மானாமதுரை, இளை யான்குடி, திருப்பு வனம், திருப்பத்தூர், தேவ கோட்டை, கல்லல், கண்ணங்குடி, சிங்கம்புணரி, எஸ்.புதூர் வட்டாரத்தை சேர்ந்த மாணவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் முகாமிலும், சாக்கோட்டை வட்டாரத்தை சேர்ந்த மாணவர்கள் காரைக்குடி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள கவியரசு கண்ணதாசன் மணிமண்டபத்தில் நடைபெறும் முகாமிலும் பங்கேற்கலாம்.

    விண்ணப்ப நகல், மாணவ-மாணவி மற்றும் பெற்றோரின் 2 புதிய புகைப்படம், வங்கி ஜாயிண்ட் அக்கவுண்ட் பாஸ்புத்தக நகல், இருப்பிட சான்று நகல், வருமான சான்று நகல், ஜாதி சான்று நகல், பான் கார்டு நகல், ஆதார் அட்டை நகல், கல்லூரியிலிருந்து பெறப்பட்ட Bonafide சான்றிதழ் மற்றும் கல்விக்கட்டண விவரம், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்பு மற்றும் இள நிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆணை ஆகிய ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.

    கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து முகாம் நடைபெறும் நாளன்று விண்ணப்பத்தின் நகல் மற்றும் குறிப்பிட்ட ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம். முகாமில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பரிசீலனை செய்து உடனடி கடன் ஆணைகளும் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×