search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்குவாரி குட்டை"

    • மோட்டார் சைக்கிளை கல்குவாரியின் அருகே நிறுத்திவிட்டு திடீரென குவாரியில் உள்ள நீரில் குதித்து மூழ்கினார்.
    • இன்று 2-வது நாளாக தீயணைப்பு வீரர்கள் வெங்கடேசன் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பூந்தமல்லி:

    மாங்காடு அடுத்த சிவன்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் என்ற விஜயகுமார் (34). இவர் மனஅழுத்தம் தொடர்பாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று காலை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றவர் சிகிச்சை முடிந்து மோட்டார் சைக்கிளில் நேராக சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரிக்கு சென்றார். மோட்டார் சைக்கிளை கல்குவாரியின் அருகே நிறுத்திவிட்டு திடீரென குவாரியில் உள்ள நீரில் குதித்து நீரில் மூழ்கினார்.

    இதையடுத்து மதுரவாயல் தீயணைப்பு வீரர்கள், மெரினாவில் உள்ள நீர்மூழ்கி நீச்சல் வீரர்கள், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் கல்குவாரியில் இறங்கி வெங்கடேசனை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை வரை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    இந்தநிலையில் இன்று 2-வது நாளாக தீயணைப்பு வீரர்கள் வெங்கடேசன் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கல்குவாரியில் அதிக அளவில் நீர் நிறைந்து காணப்படுவதாலும், சுமார் 500 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பதாலும் ஒரு கட்டத்திற்கு மேல் வீரர்கள் செல்ல முடியாததால் உடலை தேடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

    ×