search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலைஞர் மக்கள்"

    • ஆதிதிராவிடர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள அரசு அலுவலர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள்
    • கோரிக்கை மனுவுடன் தங்கள் முகவாி, செல்போன் எண், ஆதார் கார்டு நகல், குடும்ப அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கொடுக்க வேண்டும்.

    திருப்பூர்:

    தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் கலைஞர் மக்கள் சேவை முகாம் காங்கயம் ஊராட்சி ஒன்றியம் சிவன்மலை ஊராட்சி ஸ்ரீ அண்ணாமலை செட்டியார் திருமண மண்டபத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. முகாமை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற உள்ளனர். முகாமில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கூட்டுறவுத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள அரசு அலுவலர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள். எனவே சிவன்மலை ஊராட்சி பொதுமக்கள் முகாமில் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்கி பயன்பெறலாம். கோரிக்கை மனுவுடன் தங்கள் முகவாி, செல்போன் எண், ஆதார் கார்டு நகல், குடும்ப அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×