என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Service Camp"

    • ஆதிதிராவிடர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள அரசு அலுவலர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள்
    • கோரிக்கை மனுவுடன் தங்கள் முகவாி, செல்போன் எண், ஆதார் கார்டு நகல், குடும்ப அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கொடுக்க வேண்டும்.

    திருப்பூர்:

    தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் கலைஞர் மக்கள் சேவை முகாம் காங்கயம் ஊராட்சி ஒன்றியம் சிவன்மலை ஊராட்சி ஸ்ரீ அண்ணாமலை செட்டியார் திருமண மண்டபத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. முகாமை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற உள்ளனர். முகாமில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கூட்டுறவுத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள அரசு அலுவலர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள். எனவே சிவன்மலை ஊராட்சி பொதுமக்கள் முகாமில் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்கி பயன்பெறலாம். கோரிக்கை மனுவுடன் தங்கள் முகவாி, செல்போன் எண், ஆதார் கார்டு நகல், குடும்ப அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆதார் திருத்தம் மற்றும் அனைத்து அஞ்சலக சேவை சிறப்பு முகாம் நடந்தது.
    • இம்முகாமினை திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆதார் திருத்தம் மற்றும் அனைத்து அஞ்சலக சேவை சிறப்பு முகாம் நடந்தது. இம்முகாமினை திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். இதில் புதுவை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் துரைராஜன் முன்னிலை வகித்தார்.

    புதுவை அஞ்சலக கோட்ட விற்பனை மேலாளர் ரட்சகன், இந்திய அஞ்சல் வங்கி மேலாளர் ஆனந்த், சுதன், கணினி மேலாளர் கிரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இந்த முகாமில் ஆதார் அட்டையில் செல்போன் எண்ணை சேர்த்தல், மாற்றுதல், பிழை திருத்தம், அஞ்சலகங்களில் வங்கி கணக்கு தொடங்குதல், அஞ்சலக மூலம் ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு, செல்வமகள் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட சேவை திட்டங்களில் சேர்தல் உள்ளிட்ட சேவைகள் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இந்த முகாமில் பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    கேரள மாநிலத்தில் வரலாறு காணாத பலத்த மழை பெருமளவு சேதத்தை ஏற்படுத்திய நிலையில், வெள்ளத்தில் பாழடைந்த சாதனங்களை சரி செய்ய அசுஸ் சிறப்பு ஏற்பாடு செய்திருக்கிறது. #KeralaFloodRelief #ASUS



    கேரளாவில் வரலாறு காணாத பலத்த மழை, அம்மாநிலத்தில் பெருமளவு பொருட்சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தொழில்நுட்ப நிறுவனங்களான சியோமி, ஹானர் மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்கள் மீட்பு பணிகளில் உதவ முன்வந்திருக்கின்றன். இந்த நிறுவனங்கள் தண்ணீரில் பாழாகி போன ஸ்மார்ட்போன்களை குறைந்த கட்டணம் அல்லது இலவசமாக சரி செய்து வழங்குவதாக தெரிவித்தன.

    அந்த வகையில் அசுஸ் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி தண்ணீரில் பாதிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் மற்றும் கம்ப்யூட்டர்களை கூலி இல்லாமல் சரிசெய்து வழங்குவதாக அறிவிவித்துள்ளது. அசுஸ் சார்பில் மாநிலம் முழுக்க சர்வீஸ் முகாம்கள் அமைக்கப்படுகிறது. இவை அசுஸ் அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையங்களில் நிறுவப்படுகின்றன.

    தண்ணீரில் பாதிக்கப்பட்ட சாதனங்களை சரி செய்வதற்கான கூலி வாங்காமல் இலவசமாகவும், வாரண்டியில் உள்ள சாதனங்களின் உதிரிபாகங்களுக்கு 50% தள்ளுபடி அறிவித்துள்ளது. வழக்கமான கோளாறுகளை சரி செய்ய எவ்வித கட்டணமும் வசூலிக்காது. எனினும் பாகங்களை மாற்றுவதற்கு பாதி கட்டணத்தை செலுத்த வேண்டி இருக்கும்.

    உதிரிபாகங்களுக்கான 50% தள்ளுபடி வாரண்டியில் உள்ள சாதனங்களுக்கு மட்டுமே பொருந்தும். அந்த வகையில் வாரண்டியில் இல்லாத சாதனங்களை சரி செய்யும் போது உதிரிபாகங்களுக்கான முழு கட்டணத்தை செலுத்த வேண்டும். அசுஸ் சிறப்பு சர்வீஸ் முகாம்கள் ஆகஸ்டு 30-ம் தேதி முதல் செப்டம்பர் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.
    ×