search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலைஞர் மகளிர் உரிமை திட்டம்"

    • உதவி மையங்களில் தினமும் கூட்டம் அலைமோதி வருகிறது.
    • இ- சேவை மைய ஊழியர்கள் பொது மக்களின் விண்ணப்பங்களை சரி பார்த்து மீண்டும் விண்ணப்பித்தனர்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் சுமார் 4 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் பெரும்பாலான நபர்களுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு உள்ளது.

    ஆனால் ஒரு சிலரது விண்ணப்பங்கள் நிராக ரிக்கப்பட்டது. அதற்கான தகவல் செல்போனில் குறுஞ்செய்தி மூலமாக அனுப்பப்பட்டு உள்ளது. இது தொடர்பாக உரிய ஆவணங்களை காண்பித்து மீண்டும் விண்ணப்பித்துக் கொள்ள அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

    கலைஞர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பான விவரங்கள் தெரிந்து கொள்ள நாகர் கோவில் கலெக்டர் அலு வலகம், பத்மநாபபுரம் சப்- கலெக்டர் அலுவலகம், நாகர்கோவில் ஆர்.டி.ஓ. அலுவலகம், அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, கிள்ளியூர், திருவட்டார் தாலுகா அலுவல கங்களில் உதவி மையமும் திறக்கப்பட்டு உள்ளது. இந்த உதவி மையங்களில் தினமும் கூட்டம் அலைமோதி வருகிறது.

    விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை பொது மக்கள் அறிந்து கொள்ள உதவி மையங்களில் குவிந்து வருகிறார்கள்.வருமான வரி கட்டுதல், கார் மற்றும் ஏற்கனவே அரசு உதவித்தொகை பெரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் கூட்டம் அலைமோதியது. இ- சேவை மையத்தில் மறு விண்ணப்பம் செலுத்து வதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இ- சேவை மைய ஊழியர்கள் பொது மக்களின் விண்ணப்பங்களை சரி பார்த்து மீண்டும் விண்ணப்பித்தனர்.

    விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை முறை யாக தெரிவித்த பின் னர் மறுபடியும் விண்ணப்பிக்கப்பட்டது. இதனால் இ- சேவை மையத்தில் பெண்கள் கூட்டம் இன்று அதிகமாக காணப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    • வருகிற 31-ந்தேதிக்குள் முடிக்க திட்டம்
    • சுமார் 3 லட்சத்து 25 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் மின் ஆளுமை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப படி வங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. 5 லட்சத்து 77 ஆயிரத்து 127 ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு இருந்தது. முதல் கட்டமாக 400 ரேஷன் கடைகளில் விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டது.

    முதல் கட்ட முகாமில் 2,03,268 பேர் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்கினார்கள். இதைத் தொடர்ந்து மீதமுள்ள 367 ரேஷன் கடைகளில் 2-வது கட்டமாக விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டது. இதில் 1 லட்சத்து 93 ஆயிரத்து 752 பேர் விண்ணப்ப படிவங்களை வழங்கினார். இதைத்தொ டர்ந்து சிறப்பு முகாம்கள் கடந்த 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடந்தது.

    இதில் 22 ஆயிரத்து 631 பேர் விண்ணப்ப படி வங்களை வழங்கி உள்ளனர். குமரி மாவட்டத்தில் கலைஞர் உரிமை திட்டத்தில் 4 லட்சத்து 19 ஆயிரத்து 659 பேர் பூர்த்தி செய்து வழங்கியுள்ளனர். 1 லட்சத்து 57 ஆயிரத்து 487 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை. பூர்த்தி செய்து வழங்கப்பட்ட விண்ணப்ப படிவங்களில் சில குளறுபடிகள் இருப்பது தெரியவந்துள்ளது.

    இதையடுத்து அவற்றை கள ஆய்வு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். குமரி மாவட்டத்தில் சுமார் 70 ஆயிரம் விண்ணப் பங்களை கள ஆய்வு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்ட னர். அந்த விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் வீடுகளுக்கு கொண்டு சென்று ஆய்வு மேற்கொள்கிறார்கள்.

    ரேஷன் கார்டுதாரருடைய ஆண்டு வருமானம் மற்றும் விண்ணப்பங்களில் உள்ள குளறுபடிகளை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தற்பொழுது 40 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு சில விண்ணப்பதாரர்கள் தகுதி இல்லாதவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மீதமுள்ள விண்ணப்ப படிவங்களை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த பணிகளை வருகிற 31-ந்தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர். கள ஆய்வு முடிக்கப்பட்ட விண்ணப்பங்களை சென்னையில் உள்ள மின் ஆளுமை மையத்திற்கு அனுப்பி வைக்கவும் நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே சுமார் 3 லட்சத்து 25 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் மின் ஆளுமை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மின் ஆளுமை மையத்தில் பரிசீலனை செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இறுதி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கலைஞர் மகளிர் உரிமை திட்டம்
    • பொதுமக்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்க கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் நாளை (24-ந்தேதி) முதல் ஆகஸ்ட் 4-ந்தேதி வரையிலும், 2-ம் கட்ட முகாம் ஆகஸ்ட் 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையிலும் நடக்கிறது.

    முதல் கட்ட முகாம் நடைபெற உள்ள பகுதியில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்ப படிவங்களை ரேஷன் கடை ஊழியர்கள் கடந்த 3 நாட்களாக வீடு வீடாக சென்று வழங்கி வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் 400 ரேஷன் கடையில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்ப படிவம் மற்றும் டோக்கனை வழங்கினார்கள்.

    கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படிவ விநியோகத்தை குமரி மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலாசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இன்றும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    முதல் கட்ட முகாம் நடைபெறும் 400 ரேஷன் கடைகளில் சுமார் 3 லட்சத்து 4 ஆயிரம் கார்டுதாரர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் மற்றும் டோக்கன்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்றுக்குள் அனைத்து கார்டுதாரர்களுக்கும் வழங்கி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 400 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது.

    பொதுமக்கள் சிறப்பு முகாம்கள் நடைபெறும் பகுதிக்கு நேரடியாக சென்று விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். ஒவ்வொரு முகாமிலும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    500 ரேஷன் கார்டுகளுக்கு குறைவாக உள்ள முகாம்களில் 4 பேரும் அதற்கு மேல் ரேஷன் கார்டு உள்ள முகாம்களில் 5 முதல் 10 ஊழியர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் கலைஞர் உரிமைத்திட்ட முகாமிற்கு செல்லும்போது விண்ணப்ப படிவத்துடன் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, மின் இணைப்பு கார்டு மற்றும் ஆதார் கார்டு இணைக்கப்பட்ட வங்கி புத்தகத்தை கொண்டு செல்ல வேண்டும் என்று கலெக்டர் ஸ்ரீதர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • 769 அங்காடி களுக்கு 1523 இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • மகளிர் வங்கி கணக்கு தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் கூட்டரங்கு மற்றும் சிறு கூட்டரங்கில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் பயனாளிகளின் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்வது குறித்த மாவட்ட கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை சரியாக செயல்படுத்துவது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் பேசியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட நியாவிலைக் கடைகளில் 500-க்குட்பட்ட குடும்ப அட்டை கொண்ட 200 அங்காடிகளுக்கு 200 இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களும், 501 முதல் 1000 குடும்ப அட்டை கொண்ட 395 அங்காடிகளுக்கு 790 இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களும், 1001 முதல் 1500 குடும்ப அட்டை கொண்ட 163 அங்காடி களுக்கு 489 இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார் வலர்களும், 1501 முதல் 2000 குடும்ப அட்டை கொண்ட 11 அங்காடிகளுக்கு 44 இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களும் என மொத்தம் 769 அங்காடி களுக்கு 1523 இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களும், நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டமானது மகளிர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தி சமூகத்தில் சுயமரியாதை யோடு வாழ்வதற்கு இத்திட்டத்தினை சிறப்பாக செயல் படுத்த அனைத்து துறை அலுவலர்களும் ஒத்துழைக்க வேண்டும்.

    குறிப்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முகாம் நடைபெறும் இடங் களில் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சப்-கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார்கள் உள்ளிட்ட வருவாய் துறையினர் பணியாளர்களை தேர்வு செய்வது அவர்களுக்கு பயிற்சி வழங்குவது உள்ளிட்ட ஒட்டுமொத்த பணியினையும் மேற் கொள்ள வேண்டும்.

    மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள், ஊராட்சிகள்) முகாம் நடைபெறும் இடங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மாநகராட்சி மற்றும் நக ராட்சி ஆணையர்கள் இத்திட்டம் குறித்து பொது மக்களிடையே விழிப் புணர்வு ஏற்படுத்த வேண்டும். தன்னார்வலர்கள் மேலாண்மையினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மேற்கொள்ள வேண்டும்.

    கூட்டுறவு துறையின் இணைப்பதிவாளர் அனைத்து நியாவிலைக் கடைகள் மூலம் விண்ணப்பங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட மின் ஆளுமை மேலாளர் பயோ மெட்ரிக் கருவிகள் மற்றும் தொழில்நுட்ப கருவிகள் வழங்கிட வேண்டும். முன்னோடி வங்கி மேலாளர் மற்றும் அஞ்சலக வங்கி பொறுப்பாளர், மகளிர் வங்கி கணக்கு தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து அலு வலர்களும் தினந்தோறும் ஒவ்வொரு நாளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியின் முன்னேற்றம் குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படுவதோடு, அனைத்து பணிகளையும் எவ்வித தொய்வுமின்றி முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் வருவாய் அலு வலர் பாலசுப்பிரமணியம், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், திட்ட இயக்குநர்கள் பாபு (வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) விஜயலெட்சுமி, உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×