என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கர்ப்பிணி பெண்"
- ஞானதீபா தற்போது 4 மாதகர்ப்பமாக உள்ளார்.
- அந்தோணிமுத்து இது தொடர்பாக முத்தையாபுரம் போலீசில் புகார் செய்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி முத்தையாபுரம் திருமாஜிநகரை சேர்ந்தவர் அந்தோணிமுத்து (வயது 25). இவர் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த ஞானதீபா (21) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
ஞானதீபா தற்போது 4 மாதகர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அந்தோணிமுத்து வேலைக்கு சென்று வருவதாக மனைவியிடம் கூறி விட்டு சென்றார். பின்னர் மாலையில் வந்து பார்த்த போது வீட்டில் ஞானதீபா இல்லை.
அக்கம்பக்கம், உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. அருப்புக்கோட்டை தாய் வீட்டிற்கும் செல்லவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தோணிமுத்து இது தொடர்பாக முத்தையாபுரம் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானதீபா எங்கு சென்றார்? என விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.
- வீடியோ வைரல் ஆனதால் பரபரப்பு
- காயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக பத்மநாபபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியை அடுத்த கேரளாபுரத்தை சேர்ந்தவர் கில்பர்ட் ராஜன் இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த ஏஞ்சல் சகாரின் என்பவருக்கும் வழிப்பாதை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது,
இந்த நிலையில் கில்பர்ட் ராஜன் தனது வீட்டு முன் நின்று கொண்டிருந்த போது ஏஞ்சல் சகாரின் மற்றும் அவரது தம்பி பிராங்கிளின் ஆகியோர் வந்து இரும்பு கம்பியால் கில்பர்ட் ராஜனை சரமாரியாக தாக்கியுள்ளனர்,
இவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்த வந்து தடுக்க முயன்ற அவரது மனைவி 7-மாத கர்பிணியான பிரதிஷா டேனி, தாயார் ஸ்டெல்லா மேரி, அண்ணன் கிறிஸ்டோபர் ஆகியோரும் தாக்கப்பட்டனர். காயமடைந்த 4 பேரும் சிகி ச்சைக்காக பத்மநாபபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து இரு தரப்பு புகாரின் அடிப்படையில் தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது கர்ப்பிணி பெண் அவரது கணவர் உட்பட குடும்பத்தார் தாக்குதலுக்கு உள்ளான பரபரப்பு வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது. மோதல் தொடர்பாக ஏஞ்சலின் சகாரின் அவரது தம்பி பிராங்கிளின் மற்றும் கில்பர்ட் ராஜன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த தக்கலை போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்