என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் கர்ப்பிணி பெண் திடீர் மாயம்
    X

    தூத்துக்குடியில் கர்ப்பிணி பெண் திடீர் மாயம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஞானதீபா தற்போது 4 மாதகர்ப்பமாக உள்ளார்.
    • அந்தோணிமுத்து இது தொடர்பாக முத்தையாபுரம் போலீசில் புகார் செய்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரம் திருமாஜிநகரை சேர்ந்தவர் அந்தோணிமுத்து (வயது 25). இவர் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த ஞானதீபா (21) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    ஞானதீபா தற்போது 4 மாதகர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அந்தோணிமுத்து வேலைக்கு சென்று வருவதாக மனைவியிடம் கூறி விட்டு சென்றார். பின்னர் மாலையில் வந்து பார்த்த போது வீட்டில் ஞானதீபா இல்லை.

    அக்கம்பக்கம், உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. அருப்புக்கோட்டை தாய் வீட்டிற்கும் செல்லவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தோணிமுத்து இது தொடர்பாக முத்தையாபுரம் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானதீபா எங்கு சென்றார்? என விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×