search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்ப்பிணி தாய்மார்கள்"

    • 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதனப் பொருட்களை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
    • உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம், நரிக்குடி மற்றும் திருச்சுழி யில் சமூக நலன் மற்றும் மக ளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந் தது. கலெக்டர் ஜெயசீ லன் தலைமை தாங்கினார். விழா வில், 200 கர்ப்பிணி தாய் மார்களுக்கு வளைகாப்பு சீதனப் பொருட்களை அமைச்சர் தங்கம் தென்ன ரசு வழங்கினார்.

    அப்போது அவர் பேசிய தாவது:-

    தமிழக அரசின் சார்பாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத் தப்படுகிறது. நம்முடைய பாரம்பரியத்தின்படி, கர்ப் பிணி பெண்கள், கர்ப்பகா லத்தில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந் தால் தான், அவர்களுக்கு பிறக்கும் நாளைய சமுதாய குழந்தை ஆரோக்கியமான, அறிவான குழந்தை யாக இருக்கும் என்பதற்காக ஏற் படுத்தப்பட்ட அறிவியல் பூர் வமான நிகழ்ச்சியாகும்.

    ஒரு அரசு மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை வடிவமைத்து தருகிறது. பல்வேறு கட்டமைப்புகள் தேவையாக இருந்தாலும் அடிப்படையில் ஒரு நாட்டி னுடைய வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணிகளாக இருப்பது, அந்த நாட்டிலே இருக்கக்கூடிய சமுதாயம் எப்படி வாழ்கிறது என்பது தான்.

    அந்த சமுதாயத்தினுடைய வளர்ச்சிக்கு கல்வி, சுகா தாரம் ஆகிய இரண்டும் முக் கியமான காரணிகளாக இருக்கிறது. அந்த அடிப்ப டையில் தான் மாண்புமிகு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு இரண்டு ஆண்டு காலத்திலே நாட்டினுடைய வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கக்கூ டிய இந்த இரண்டு பெரும் காரணிகளுக்கு மிகப்பெரிய முக்கியத்துவத்தை தந்திருக்கி றார்கள்.

    திருச்சுழி தொகுதி மக்க ளின் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைப் பதற்கான பல ஆண்டு கோரிக்கையினை நிறை வேற்றி தந்துள்ளது தமிழக அரசு.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இந்நிகழ்ச்சியில் ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் (பொ) ஹேமலதா, அருப்புக்கோட்டை கோட் டாட்சியர் (பொ) வித்யா, நரிக்குடி ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் காளீஸ்வரி சமயவேலு, திருச்சுழி ஊராட்சி ஒன்றிக்குழுத்த லைவர் பொன்னுதம்பி, மாவட்ட ஊராட்சி உறுப்பி னர்கள் போஸ், கமலிபாரதி, நரிக்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், கண்டுகொண்டான் மாணிக் கம் ஊராட்சி மன்ற தலைவர் வேலம்மாள் ராஜேந்திரன், திருச்சுழி தி.மு.க. செயலாளர் சந்தன பாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர்கள், வட்டாட்சியர்கள் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் மனோதங்கராஜ் பங்கேற்பு
    • கர்ப்பிணி பெண்களுக்கான சமையல் போட்டி நடத்தப்பட்டது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் சார்பில் திருவி தாங்கோடு துறப்பு எம்.எம். நினைவு மண்டபத்தில் மாவட்ட வருவாய் அலு வலர் சிவப்பிரியா தலைமை யில் கர்ப்பிணி தாய்மார்க ளுக்கான சமுதாய வளை காப்பு நிகழ்ச்சி நடை பெற்றது.

    நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சமுதாய வளை காப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதா வது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர்மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை உடனுக்கு டன் நிறைவேற்றி வருகிறது. கர்ப்பிணி தாய்மார்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்ற உயரிய நோக்கில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 2500 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஒரு தொகுதிக்கு ரூ.15 ஆயிரம் வீதம் 50 தொகுதிக்கு ரூ.7.50 லட்சம் மதிப்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு நடத்துவதற்கு தமிழக அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை உண்டு என்ற சட்டத்தினை கொண்டு வந்தார். தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற நாளிலிருந்து பெண்கள் ஆண்களுக்கு நிகராக தங்களது வாழ்வில் ஏற்றம் பெற வேண்டுமென்ற உயரிய நோக்கில் அவர்களுக்கு தேவையான கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை ஏற்படுத்தி தந்து தமிழக பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்துள்ளார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆரோக்கிய குழந்தை களுக்குள் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று இடம் பிடித்த குழந்தையின் தாய்மார்களுக்கு பரிசு களையும், ஆறுதல் பரிசையும் அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கி னர். மேலும், கர்ப்பிணி பெண்களுக்கான சமையல் போட்டிகளில் முதல் மூன்று இடத்தை பெற்று வெற்றி பெற்ற கர்ப்பிணி பெண்களுக்கு பரிசுகளையும், ஆறுதல் பரிசு ஒரு கர்ப்பிணிக்கும் வழங்கினார்கள்.

    மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் சரோஜினி, திருவிதாங்கோடு பேரூராட்சித் தலைவர் ஹாருன்றஷீது (நஸீர்), துணைத்தலைவர் சுல்பத் அமீர், செயல் அலுவலர் வினிதா, கோதநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் அனீஸ், தக்கலை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×