search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்ப்பிணி தற்கொலை முயற்சி"

    • மன வருத்தத்தில் இருந்த அபிராமி, வீட்டில் இருந்த மண்ணெண்ணையை தனக்குத்தானே உடலில் ஊற்றி கொண்டு தீயிட்டு கொளுத்திக் கொண்டார்.
    • அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு ஓடிவந்து தீயை அணைத்து, 108 மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைமனையில் சேர்த்தனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்து மீன்சுருட்டி அருகே வெத்தியார் வெட்டு கிராமத்தை சேர்ந்தவர் விஜய் பிரகாஷ். கூலி தொழிலாளியான இவருக்கு அபிராமி என்ற மனைவியும், ஒன்றரை வயதில் அகிலேஷ் என்ற ஒரு மகனும் உள்ளார். மேலும் மனைவி அபிராமி 5 மாத கர்ப்பிணையாக உள்ளார்.

    இந்நிலையில் விஜய் பிரகாஷ் கறி எடுத்து வந்து கொடுத்ததாகவும், கறியை சமைப்பதற்காக அபிராமி சுத்தம் செய்து கொண்டிருந்த போது, அவரது மகன் அகிலேஷ் தண்ணீரில் விளையாடியதால் அபிராமி சிறுவனை அடித்துள்ளார்.

    இதனைப் பார்த்த அபிராமியின் மாமனார் கலியமூர்த்தி, மாமியார் வசந்தா ஆகிய இருவரும் அபிராமியை தகாத வார்த்தைகளால் திட்டி குழந்தையை ஏன் அடிக்கிறாய் என கேட்டுள்ளனர். இதனால் இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த அபிராமியின் கணவர் விஜய் பிரகாஷிடம் கூறிய போது, அவரும் அவரது தாய், தந்தைக்கு ஆதரவாக பேசியதாக தெரிகிறது.

    இதனால் மன வருத்தத்தில் இருந்த அபிராமி, வீட்டில் இருந்த மண்ணெண்ணையை தனக்குத்தானே உடலில் ஊற்றி கொண்டு தீயிட்டு கொளுத்திக் கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு ஓடிவந்து தீயை அணைத்து, 108 மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைமனையில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை முடிந்து, மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து மீன்சுருட்டி காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×