search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pregnant woman suicide attempt"

    • மன வருத்தத்தில் இருந்த அபிராமி, வீட்டில் இருந்த மண்ணெண்ணையை தனக்குத்தானே உடலில் ஊற்றி கொண்டு தீயிட்டு கொளுத்திக் கொண்டார்.
    • அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு ஓடிவந்து தீயை அணைத்து, 108 மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைமனையில் சேர்த்தனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்து மீன்சுருட்டி அருகே வெத்தியார் வெட்டு கிராமத்தை சேர்ந்தவர் விஜய் பிரகாஷ். கூலி தொழிலாளியான இவருக்கு அபிராமி என்ற மனைவியும், ஒன்றரை வயதில் அகிலேஷ் என்ற ஒரு மகனும் உள்ளார். மேலும் மனைவி அபிராமி 5 மாத கர்ப்பிணையாக உள்ளார்.

    இந்நிலையில் விஜய் பிரகாஷ் கறி எடுத்து வந்து கொடுத்ததாகவும், கறியை சமைப்பதற்காக அபிராமி சுத்தம் செய்து கொண்டிருந்த போது, அவரது மகன் அகிலேஷ் தண்ணீரில் விளையாடியதால் அபிராமி சிறுவனை அடித்துள்ளார்.

    இதனைப் பார்த்த அபிராமியின் மாமனார் கலியமூர்த்தி, மாமியார் வசந்தா ஆகிய இருவரும் அபிராமியை தகாத வார்த்தைகளால் திட்டி குழந்தையை ஏன் அடிக்கிறாய் என கேட்டுள்ளனர். இதனால் இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த அபிராமியின் கணவர் விஜய் பிரகாஷிடம் கூறிய போது, அவரும் அவரது தாய், தந்தைக்கு ஆதரவாக பேசியதாக தெரிகிறது.

    இதனால் மன வருத்தத்தில் இருந்த அபிராமி, வீட்டில் இருந்த மண்ணெண்ணையை தனக்குத்தானே உடலில் ஊற்றி கொண்டு தீயிட்டு கொளுத்திக் கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு ஓடிவந்து தீயை அணைத்து, 108 மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைமனையில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை முடிந்து, மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து மீன்சுருட்டி காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே குடும்ப தகராறில் கர்ப்பிணி பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள தொடுவாய் சுனாமி நகரை சேர்ந்தவர் உதயகுமார். மீனவர். இவரது மனைவி சகுந்தலா வள்ளி (வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. ரோகித் (6) மற்றும் ரசித் (2) என்ற 2 ஆண் மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சகுந்தலாவள்ளி 3-வது முறையாக கர்ப்பம் ஆனார். 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    நேற்று மாலை சகுந்தலா வள்ளியின் மாமியார் ராஜவள்ளி அங்கு வந்தார். அவர் மருமகள் சகுந்தலா வள்ளியிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சகுந்தலாவள்ளி மனம் உடைந்தார். கர்ப்பிணி என்று பாராமல் தன்னுடன் மாமியார் தகராறு செய்கிறாரே என்று விரக்தி அடைந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். வலி தாங்க முடியாமல் அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். உடல்கருகிய நிலையில் இருந்த சகுந்தலா வள்ளியை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த சகுந்தலாவள்ளியின் உறவினர்கள் அங்கு திரண்டனர்.

    இந்த நிலையில் இன்று காலை சகுந்தலாவள்ளிக்கு பிரசவ வலி ஏற்பட்டு வலியால் துடித்தார். இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அறுவை சிகிச்சை செய்து பெண் குழந்தையை வெளியே எடுத்தனர். ஆனால் குழந்தை இறந்து பிறந்தது. இதை பார்த்த அவரது உறவினர்கள் கதறி அழுதனர். தொடர்ந்து சகுந்தலாவள்ளிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது குறித்து சீர்காழி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வருகின்றனர்.
    ×