search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருப்பையா"

    • ஆடி பதினெட்டில் செல்வம் பெருக எந்த ராசிக்காரர்கள், யாரை வழிபடலாம்?
    • பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா விளக்கமளித்தார்.

    மதுரை

    பொதுவாக ஆடி மாதம் என்பது அம்மன் மாதம் என்று சொல்வார்கள்.மேலும், ஆடி மாதங்களில் சுப காரியங்கள் செய்ய சற்று யோசிப்பார்கள். ஆனால், ஆடி 18 அன்று பதி னெட்டாம் பெருக்கு என்ப தால் அனைத்து சுபகாரியங் களையும் தாராளமாக செய் வார்கள். ஆடி 18 அன்று என்ன செய்தாலும் பல மடங் காக பெருகும் என்பது காலம் காலமாக, நம்பிக் கையாக நடந்து வருகிறது. அந்த வகையில் ஆடி 18 அன்று எந்த ராசிக்காரர்கள் யாரை வழிபட்டால் செல்வ வளம் கூடும் என்று பிரபல ஜோதிடர் மதுரை -மடப் புரம் விலக்கு கரு. கருப்பை யா விளக்கம் அளித்துள்ளார். பொதுவாக அனைத்து ராசிக் காரர்களும் குலதெய் வத்தை வழிபட்டு வருவது கூடுதல் பலன் கொடுக்கு மாம்.

    குறிப்பாக மேஷம் ராசிக் காரர்கள் முருகனையும், ரிஷபம் ராசிக்காரர்கள் சிவ பெருமானையும், மிதுனம் ராசிக்காரர்கள் பெரு மாளையும், கடகம் ராசிக்கா ரர்கள் கால பைரவரையும், சிம்மம் ராசிக்காரர்கள் காளியம்மனையும், கன்னி ராசிக்காரர்கள் சக்கரத் தாழ்வாரையும், துலாம் ராசிக்காரர்கள் ஜீவ சமாதி களையும், விருச்சிகம் ராசிக் காரர்கள் முருகப்பெரு மானையும், தனுசு ராசிக் காரர்கள் அனுமனையும், மகரம் ராசிக்காரர்கள் மகா லட்சுமியையும், கும்பம் ராசிக்காரர்கள் தெற்குமுக விநாயகப் பெருமானையும், மீனம் ராசிக்காரர்கள் நவக் கிரகங்களில் உள்ள குரு பகவானையும், வாச முள்ள மலர்கள் சாற்றி வழிபட்டு வந்தால் செல்வ வளம் கூடுமாம்.

    இவ்வாறு பிரபல ஜோதிடர் திருப்புவனம் கரு. கருப்பையா கூறியுள்ளார்.

    ×