search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருத்து கேட்பு கூட்டம்"

    • பட்டா மாற்றம் போன்ற பதிவுத்துறை, வருவாய்துறை ஒருங்கிணைந்த செயல்பாடுகளுக்கு இது இடையூறாக உள்ளது.
    • திருச்சி வருவாய் மாவட்டம் சம்மந்தப்பட்ட லால்குடி, புள்ளம்பாடி, துறையூர் மற்றும் உப்பிலியபுரம் ஆகிய நான்று சார்பதிவகங்கள் திருச்சி பதிவு வருவாய் மாவட்ட எல்லையில் இணைக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

    அரியலூர்:

    வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சரால் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 06.09.2021 அன்று 2021-2022 ஆம் ஆண்டிற்கான வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் மானியக்கோரிக்கையின் போது பதிவுத்துறையில் சில சார்பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் சில வருவாய் கிராமங்கள் வேறு வருவாய் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள நிலை உள்ளது.

    பட்டா மாற்றம் போன்ற பதிவுத்துறை, வருவாய்துறை ஒருங்கிணைந்த செயல்பாடுகளுக்கு இது இடையூறாக உள்ளது. எனவே, வருவாய் கிராமங்கள் முழுவதும் ஒரே வருவாய் மாவட்ட ஆட்சி எல்லைக்குள் கொண்டு வரும் வகையில் சார்பதிவக எல்லைகள் சீரமைக்கப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது.

    அரியலூர் பதிவு மாவட்டத்தை பொறுத்து, அரியலூர் பதிவு மாவட்ட எல்லையில், திருச்சி வருவாய் மாவட்டம் சம்மந்தப்பட்ட லால்குடி, புள்ளம்பாடி, துறையூர் மற்றும் உப்பிலியபுரம் ஆகிய நான்று சார்பதிவகங்கள் திருச்சி பதிவு வருவாய் மாவட்ட எல்லையில் இணைக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக துணைப்பதிவு துறைத்தலைவர் அலுவலகம், திருச்சி மாவட்டப்பதிவாளர் அலுவலகம், அரியலூர் சார்பதிவாளர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், ஆகியவற்றில் பொதுமக்கள் பார்வைக்காக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் இதுகுறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் 27.07.2022 பொதுமக்களின் கருத்துகேட்பு கூட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. அக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரணஸ்வதி தெரிவித்துள்ளார்.

    ×