search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருத்தரங்கு விழா"

    • பெண்கள் தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்து தங்கள் வாழ்வின் இலக்கினை அடைய வேண்டும்.
    • போட்டிகள் நிறைந்த உலகில் குடும்ப சூழ்நிலை மற்றும் வேறு எவ்வித காரணங்களுக்காகவும் பின்வாங்க கூடாது

    நத்தம்:

    நத்தம் என்.பி.ஆர்.கல்லூரியில் மகளிர் மேம்பாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.விழாவிற்கு என்.பி.ஆர்நர்சிங் கல்லூரி முதல்வர் அன்னலெட்சுமி தலைமை வகித்தார். கணினி அறிவியல் துறை மாணவி அனுசியாபேகம் வரவேற்றார்.விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய தகவல் தொழில்நுட்ப துறை இணை கண்காணிப்பாளர் அருள்மதி ஐ.ஏ.எஸ் பேசுகையில்,

    பெண்கள் தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்து தங்கள் வாழ்வின் இலக்கினை அடைய வேண்டும். எவ்வித இடையூறுகள் ஏற்பட்டாலும் விடாமுயற்சி யுடன் இலக்கினை அடைய வேண்டும். பெண்கள் தங்களுக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும்.

    போட்டிகள் நிறைந்த உலகில் குடும்ப சூழ்நிலை மற்றும் வேறு எவ்வித காரணங்களுக்காகவும் பின்வாங்க கூடாது மாணவிகள் தங்கள் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என பேசினார். முடிவில் நர்சிங் மாணவர் பாபிஜான் நன்றி கூறினார்.இதில் என்.பி.ஆர்.கல்வி குழுமத்தை சேர்ந்த மாணவிகள், பேராசியர்கள் கலந்து கொண்டனர்.

    ×