search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரி வரதராஜ பெருமாளுக்கு"

    • பெருமாள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு அணிவித்து பூஜைகள் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சை புளியம்பட்டி அடுத்து கோவில் புதூரில் ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் இருந்து வாகனங்களில் பெருமாள், கிருஷ்ணர், ராமர் உள்ளிட்ட தெய்வங்கள் எழுந்தருளி ஸ்ரீ பிளேக் மாரியம்மன் கோவிலை வந்தடைந்து அம்பு சேர்வை விழா நடைபெறுவது வழக்கம்.

    இந்நிலையில் இந்தாண்டு அம்பு சேர்வை விழா நடக்கும் நாளான இன்று விழா ரத்து செய்யப்பட்டதால் மதுரையில் இருந்து ஆண்டாளுக்கு சாத்திய சூடிக்கொடுத்த கிளிகளுடன் அமைந்த மாலை வரவழைத்து கொலுவின் கடைசி நாளான நேற்று பிளேக் மாரியம்மன் கோவிலில் வைத்து பூஜைகள் செய்து பின்பு இன்று அதிகாலை ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலுக்கு எடுத்து சென்று பெருமாள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு அணிவித்து பூஜைகள் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×