search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கமுதி கோர்ட்டு"

    • கமுதி கோர்ட்டில் ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு செய்தார்.
    • சிவில் வழக்குகள் மிக குறைவாக பதிவாகியுள்ளது ஏன்? என்று வக்கீல்களிடம் கேள்வி எழுப்பினார்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மாவட்ட உரிமையியல் மற்றும் நடுவர் நீதிமன்றத்தில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஸ்ரீமதி ஆய்வு செய்தார். நீதிமன்ற அலுவலக கோப்புகள் மற்றும் குற்ற வழக்குகள் குறித்தும் விசாரித்தார். சிவில் வழக்குகள் மிக குறைவாக பதிவாகியுள்ளது ஏன்? என்று வக்கீல்களிடம் கேள்வி எழுப்பினார். கோர்ட்டு வளாகத்தில் நீதிபதி ஸ்ரீமதி மரக்கன்று நட்டு, பணியாளர்களிடம் தினமும் இந்த மரக்கன்றுக்கு கண்டிப்பாக தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். கமுதி நீதிமன்றத்திற்கான சொந்த கட்டிடம் கட்ட இடம் ஒதுக்கியும், கட்டுமான பணி தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், அதனை விரைவில் தொடங்க வேண்டும் என்றும் வக்கீல் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த ஆய்வின்போது ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் தலைமை நீதிபதி கவிதா, கூடுதல் மாவட்ட நீதிபதி கஜாரர் ஜிஜி, முதுகுளத்தூர் சார்பு நீதிபதி ராஜகுமாரன், பரமக்குடி கூடுதல் மாவட்ட நீதிபதி சாந்தி, உள்ளிட்டோர் உடன் இருந்தனர். கமுதி மாவட்ட உரிமையியல் மற்றும் நடுவர் நீதிமன்ற நீதிபதி சங்கீதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    ×