என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கன்னியாகுமரி பள்ளி"
- கன்னியாகுமரி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
- விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடை பெற்றது. கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபரும் பள்ளி தாளாளருமான அருட்பணியாளர் ஆன்றனி அல்காந்தர் தலைமை தாங்கினார். பள்ளி தலைமைஆசிரியை பிரசன்னா, பங்குப் பேரவை துணைத் தலைவர் ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுகலை ஆசிரியர் சிலுவை ஆன்றனி வரவேற்றுபேசினார்.
நாகர்கோவில் அண்ணா பல்கலைக்கழக தொழிற் நுட்ப கல்லூரியின் மனித நேயம் மற்றும் அறிவியல் துறை உதவி பேராசிரியர் வின்சென்ட் ஜெரின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தார். இயற்பி யல் துறை, வேதியியல் துறை, தாவரவியல் துறை, விலங்கி யல் துறை, வர லாற்றுத் துறை, கணிதத் துறை போன்ற துறைகளிலி ருந்து 150 படைப்புகள் வைக் கப்பட்டிருந்தது.
இதில் மழை முன்னறி விப்பான், ஒளிபடக் கருவி, வெப்பநிலை கண்ட றிதல், தெரு விளக்கு தானி யங்கி உலோகம் கண்டு பிடிக்கும் கருவி, நீராவி எந்திரம் ஆகியவை சிறப்பிடம் பெற்றது. சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இடைநிலை ஆசிரியர் ஜெய யோகினி நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை உயர்நிலை ஆசிரியர் சகாய ஜெசி தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்