search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கதர் விற்பனை விழா"

    • மகாத்மா காந்தி பிறந்த நாள்-கதர் சிறப்பு விற்பனை விழா அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
    • 409 பயனாளிகளின் குடும்பங்களுக்கு வாழ்வா தாரமாக தலா ரூ.5000 வீதம் வருடந்தோறும் வழங்கப் பட்டு வருகிறது.

    மதுரை

    மதுரை, மேலமாசி வீதி யில் உள்ள கதர் விற்பனை நிலையத்தில் இன்று தமிழ் நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் சார்பில் காந்தியடி கள் பிறந்த நாள் விழா மற்றும் கதர் சிறப்பு விற் பனை விழா நடைபெற்றது. விழாவில் வணிகவரி மற் றும் பதிவுத்துறை அமைச் சர் பி.மூர்த்தி, தக வல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியா கராஜன் ஆகியோர் காந்திய டிகள் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தி, தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தனர்.

    காந்தியடிகளால் கிரா மப்புற ஏழை, எளிய மக்க ளுக்கு ஆண்டு முழுவ தும் வாழ்வளிக்க வேண்டு மென்ற சீரிய நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது தான் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம். தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி வட்டம் அன்னமார்பட்டியில் கிராமிய நூற்பு நிலையம் 1-ம், உசிலம்பட்டி கதர் உபகிளை மற்றும் மேலமாசி வீதியில் கதர் அங்காடியும் செயல்பட்டு வருகின்றன.

    கிராமிய நூற்பு நிலையத் தில் 25 ராட்டைகள் மற்றும் கதர் உபகிளையில் 15 தறிக ளும் செயல்பட்டு வருகிறது. இதனால் கிராமப்புற மக்க ளின் வாழ்க்கைத்தரம் மேம் படுத்தப்பட்டும், அவர்களின் பொருளாதார நிலை உயர்வு செய்யப்படும் அண்ணல் காந்தியின் கொள்கையினை முழுவதுமாக கடைப்பிடித்து இத்துறையினரால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகி றது.

    மேலும் கதர் அங்காடிகள் மூலமாக கடந்த ஆண்டு கதர் ரகங்கள் குறியீடு ரூ.75 லட்சத்தில் கதர் ரகங்கள் ரூ.49.99 லட்சமும் மற்றும் கிராமப் பொருட்கள் குறி யீடு ரூ.65.00 லட்சத்தில் ரூ.24.28 லட்சமும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், மண்பாண்ட தொழி லாளர்களுக்கு மழைக்கால பராமரிப்பு உதவி தொகை யாக 409 பயனாளிகளின் குடும்பங்களுக்கு வாழ்வா தாரமாக தலா ரூ.5000 வீதம் வருடந்தோறும் வழங்கப் பட்டு வருகிறது.

    மதுரை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் அண்ணல் காந்தியடிகளின் 155-வது பிறந்தநாள் விழா மற்றும் தீபாவளி சிறப்பு கதர் விற்ப னையை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் அலுவ லகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், ஊராட்சி ஒன்றிய அலுவல கங்கள், நகராட்சிகள், பேரூ ராட்சிகள், அரசு மருத்துவ மனை வளாகங்களில் ஆகிய இடங்களில் 02.10.2023 முதல் தீபாவளி முடியும் வரை தற்காலிக விற்பனை நிலையங்கள் செயல்படுத் தப்படுகிறது.

    அரசு துறைகளில் பணி யாற்றும் பணியாளர்களுக்கு மாத ஊதியத்தில் 10 சம தவணைகளில் பெற்றிடும் வகையில் கடனுக்கும் கதர் ரகங்கள் விற்பனை செய்யப் பட்டு வருகிறது. பொது மக்கள் மற்றும் அரசுத் துறை ஊழியர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் தீபாவளி வரை எல்லா நாட்களிலும் கதர் அங்காடி கள் செயல்படும்.

    இந்த ஆண்டு மதுரை மாவட்டத் திற்கு கதர் விற்பனை குறியீ டாக ரூ.1 கோடியே 80 லட்சம் நிர்ண யிக்கப்பட்டுள் ளது. இக்கு றியீட்டினை அடைந்திட பொதுமக்கள், அரசு ஊழி யர்கள், ஆசிரியப் பெரு மக்கள் உள்ளிட்ட அனைவ ரும் இத்தொழிலில் ஈடுபட்டி ருக்கும் நுாற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் வாழ்வாதாரம் சிறக்க கதர் துணிகளை வாங்கி ஒத்து ழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

    விழாவில் மாவட்ட கலெக்டர் சங்கீதா, மாநக ராட்சி மேயர் இந்திராணி, மாவட்ட ஊராட்சித் தலைவர் சூரியகலா கலா நிதி, மதுரை கதர் கிராமத் தொழில்கள் உதவி இயக்கு நர் சுதாகர் அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×