search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்மாய் ஆக்கிரமிப்பால் விவசாயிகள் வேதனை"

    • வராகநதி வழியாக சில்வார்பட்டியில் உள்ள வேட்டுவன்குளம் கண்மாயில் சென்றடைகிறது.
    • ஆண்டுக்கு 2 போகம் சாகுபடி செய்ய வேண்டிய நிலையில் தற்போது ஒரு போகத்திற்கே தண்ணீர் கிடைக்க வில்லை என இப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் தேவ தானப்பட்டி அருகில் உள்ள சில்வார்பட்டி வேட்டு வன்குளம் கண்மாய் நீரை பயன்படுத்தி நூற்றுக்கண க்கான ஏக்கர் நிலங்களில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    வடகிழக்கு பருவமழை காரணமாக சோத்துப்பாறை அணையில் இருந்து தற்போது கூடுதல் தண்ணீ ர்திறக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் வராகநதி வழியாக சில்வார்பட்டியில் உள்ள வேட்டுவன்குளம் கண்மாயில் சென்றடைகிறது. இவ்வாறு தேக்கி வைக்கப்படும் தண்ணீர் 6 மாதங்கள் வரை வைத்து பின்னர் விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

    ஆனால் தற்போது கண்மாய் பலரது ஆக்கிர மிப்பின் பிடியில் சிக்கி உள்ளதால் போதிய தண்ணீரை சேமிக்க முடிய வில்லை. ஆண்டுக்கு 2 போகம் சாகுபடி செய்ய வேண்டிய நிலையில் தற்போது ஒரு போகத்திற்கே தண்ணீர் கிடைக்க வில்லை என இப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    விவசாயத்திற்கு சேமித்து வைக்கும் தண்ணீர் விளை நிலங்களுக்குள் புகுந்து தற்போது பயிர்களும் மூழ்கும் நிலை உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி கண்மாயை முழுமையாக தூர்வாரி நீரை சேமித்து வைத்தால் இப்பகுதி விவ சாயிகளுக்கு பேருதவியாக இருக்கும். இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்ப டவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்ற னர். எனவே வேட்டு வன்குளம் கண்மாயை நம்பி உள்ள விவசாயிகளின் கோரிக்கைைய நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    ×