search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டுமான பணிகள் பதிவு"

    • தொழிலாளர் நலத்துறையின் சார்பில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் கண்காணிப்புக் குழுக்கூட்டம் நடைபெற்றது.
    • தேனி மாவட்டத்தில் கட்டிடம், கட்டுமான பணிகள் பதிவு செய்வது அவசியம் என கலெக்டர் தெரிவித்தார்.

    தேனி

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் கண்காணிப்புக் குழுக்கூட்டம் நடைபெற்றது.

    தேனி மாவட்டத்தில் அரசு சார்பாக நேரடியாகவோ அல்லது ஒப்பந்ததாரர்களை கொண்டோ நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளை இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். மேலும், தனியார் கட்டுமானப் பணியிடங்கள், தனிப்பட்ட பொறியாளர்கள் மூலமாக கட்டப்படும் கட்டுமானங்களும் இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். பதிவு செய்திருந்தால் மட்டுமே அங்கு பணிபுரியும் கட்டிடத் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பையும், சுகாதாரத்தையும் நேரடியாக கண்காணித்து ஆலோசனைகள் வழங்கப்படும்.

    மேலும், அவர்களை தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவுசெய்து அவர்களுக்கான நலத்திட்ட உதவிகளை முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க முடியும். கட்டுமானப் பணியிடத்தில் ஒரு தொழிலாளி விபத்து ஏற்பட்டு இறக்க நேரிட்டால், அத்தொழிலாளியின் குடும்பத்திற்கு இச்சட்டத்தின்படி தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தின் மூலமாக ரூ.5,00,000 இழப்பீடு வழங்கப்படும். மேலும் பணிபுரியும் கட்டுமானப் பணியிடத்தில் தொழிலாளிக்கு விபத்து ஏதேனும் ஏற்பட்டால் அவ்விபத்தின் மூலம் ஏற்பட்ட காயங்கள் மற்றும் ஊனங்களின் வீரியத்தைப் பொறுத்து ரூ.1,00,000 இழப்பீட்டு தொகை வழங்கப்படும்.

    கட்டுமானப் பணியிடத்தில் பணிபுரியும் அனைத்து பிற மாநில தொழிலாளர்களையும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்வதன் மூலமாக அத்தொழிலாளர்களுக்கும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் அளிக்கப்படும். ஆகவே தேனி மாவட்டத்தில் நடைபெறும் தனியார் கட்டிடம் மற்றும் இதரகட்டுமானப் பணியிடங்கள், தனிப்பட்ட பொறியாளர் மூலமாக கட்டப்படும் கட்டுமானங்கள் மற்றும் அரசு சார்ந்தகட்டுமானப் பணியிடங்கள் அனைத்தும் இச்சட்டத்தின்கீழ் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    மேலும், இது தொடர்பான விவரங்கள் அறிய துணை இயக்குநர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், நேருஜி நகர், திண்டுக்கல். (திண்டுக்கல், தேனி, கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கியது) என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்தார்.

    ×