search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டிடம் விழுந்தது"

    • கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது.
    • கட்டிடம் தானாக இடிந்து விழுந்தது.

    ராயபுரம்:

    சென்னை ராயபுரம் ஆஞ்சநேயா நகர், 6-வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 24). இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இது 50 ஆண்டுகாலம் பழமையான கட்டிடம் ஆகும். இந்த வீடு மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், இந்த கட்டிடத்தை வருகிற டிசம்பர் மாதம் இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் அந்த கட்டிடம் முழுவதும் மழைநீரில் ஊறியது. இதனால் நேற்று அந்த கட்டிடம் தானாக இடிந்து விழுந்தது. அப்போது கட்டிடத்தின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த 15 வயது சிறுமிக்கு காலில் லேசானம் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    கட்டிடம் இடிந்து விழுந்தது பற்றி இதுபற்றி ரமேஷ், ராயபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கட்டிடம் முழுவதையும் இடித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராயபுரம் எம்.எல்.ஏ. ஐட்ரீம் மூர்த்தி நேரில் சென்று சபவ இடத்தை பார்வையிட்டார்.

    • மழையால் கட்டிடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்துள்ளது.
    • கட்டிடம் இடிந்து விழுந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இரவு மற்றும் பகலிலும் மழை பெய்து வந்த நிலையில் இன்று மழை நின்று சூரிய வெளிச் சம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் திரு வல்லிக்கேணியில் பழமை யான கட்டிடம் ஒன்று இன்று பகலில் இடிந்து விழுந்தது. பாரதி சாலையில் உள்ள 50 ஆண்டு பழமை யான கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் உயிர் சேதம் எதுவும் ஏற்பட வில்லை. கட்டிடம் இடிந்து விழுந்த தில் அங்கு நின்ற கார், ஆட்டோ போன்ற வாகனங் கள் அப்பளம் போல் நொறுங்கின. அந்த பகுதி யில் அப்போது ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப் பட்டது.

    தொடர்ந்து பெய்த மழை யால் கட்டிடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்துள்ளது. தகவல் அறிந்து ஜாம்பஜார் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளை அகற்றி னார்கள்.

    போலீஸ் விசாரணையில் அந்த கட்டிடம் கோபால் என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது. பழமை யான கட்டிடம் இடிந்து விழுந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ×