என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
50 ஆண்டு பழமையான வீடு இடிந்து விழுந்தது- சிறுமி காயம்
- கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது.
- கட்டிடம் தானாக இடிந்து விழுந்தது.
ராயபுரம்:
சென்னை ராயபுரம் ஆஞ்சநேயா நகர், 6-வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 24). இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இது 50 ஆண்டுகாலம் பழமையான கட்டிடம் ஆகும். இந்த வீடு மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், இந்த கட்டிடத்தை வருகிற டிசம்பர் மாதம் இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் அந்த கட்டிடம் முழுவதும் மழைநீரில் ஊறியது. இதனால் நேற்று அந்த கட்டிடம் தானாக இடிந்து விழுந்தது. அப்போது கட்டிடத்தின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த 15 வயது சிறுமிக்கு காலில் லேசானம் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
கட்டிடம் இடிந்து விழுந்தது பற்றி இதுபற்றி ரமேஷ், ராயபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கட்டிடம் முழுவதையும் இடித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராயபுரம் எம்.எல்.ஏ. ஐட்ரீம் மூர்த்தி நேரில் சென்று சபவ இடத்தை பார்வையிட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்