search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டிட காண்டிராக்டர்"

    • மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கைது
    • மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

    தக்கலை :

    தக்கலை அருகே உள்ள பனங்குழி கப்பியறை பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 53). இவர் கேரளாவில் கட்டிட காண்டிராக்டர் தொழில் செய்து வருகிறார்.

    நேற்று மாலை அவர் கேரளாவில் இருந்து தக்கலைக்கு வந்தார். இரவு 7 மணியளவில் திருவிதாங்கோடு பகுதியில் உள்ள அமராவதி குளத்தின் வழியாக சுப்பிரமணியன் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அங்கு வந்தனர்.

    அவர்கள், சுப்பிர மணியனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். பின்னர் அவரை தாக்கிவிட்டு ரூ.25 ஆயிரத்தை பறித்தனர். தாக்குதலில் காயம் அடைந்த சுப்பிரமணியன் கூச்சலிட்டதால், அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதனை கண்டதும் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

    தாக்குதலில் காயம் அடைந்த சுப்பிரமணியன், சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்துள்ளார். தாக்குதல் மற்றும் வழிப்பறி குறித்து தக்கலை போலீசில் சுப்பிரமணியன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் போலீசார், திருவிதாங்கோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்துள்ளனர். அவர்கள், போலீசாரை கண்டதும் வாகனத்தை திருப்பிச் செல்ல முயன்றனர்.இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், மோட்டார் சைக்கிளில் தப்ப முயன்ற 2 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்க ளிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பேசி உள்ளனர். இதனை தொடர்ந்து 2 பேரையும் போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் தான், நேற்று இரவு காண்டிராக்டர் சுப்பிரமணியனை தாக்கி பணம் பறித்தவர்கள் என்பது தெரியவந்தது. அதன்பேரில் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்களது பெயர் திருவிதாங்கோடு முகமது சார்ஜின் (28), வேர்க்கிளம்பி தாணிவிளை பெலிக்ஸ் (24) என தெரியவந்தது. இவர்கள் வேறு எங்காவது வழிப்பறி உள்ளிட்ட குற்றச் செய ணல்களில் ஈடு பட்டுள்ளார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு கின்றனர்..

    • மணிகண்டன் கோவை புதூருக்கு ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்று இருந்தார்.
    • விசாரணையில் வனிதா என்ற பெண் 4 பேருடன் சேர்ந்து மணிகண்டனை காரில் கடத்தியது தெரியவந்தது.

    குனியமுத்தூர்:

    கோவை சுந்தரபுரம் அருகே மாச்சம் பாளையம் அனீஸ் கார்டனை சேர்ந்தவர் மணிகண்டன் (42). இவர் கட்டிட காண்டிராக்டர் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி சொந்தமாக ஒரு நிறுவனம் நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று மணிகண்டன் கோவை புதூருக்கு ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்று இருந்தார்.

    அவரது மனைவி மகேஸ்வரி வீட்டில் தனியாக இருக்கும்போது, பெண் உள்பட 5 பேர் அங்கு வந்தனர். அவர்கள் மகேஸ்வரியிடம் அவரது கணவரை பற்றி விசாரித்து மிரட்டல் விடுத்தனர். உடனே மகேஸ்வரி திருமணத்துக்கு சென்று இருந்த தனது கணவர் மணிகண்டனுக்கு தகவல் தெரிவித்தார்.

    மணிகண்டன் வந்ததும், அந்த பெண் செல்போனில் பேசி விட்டு, 2 பேரின் செல்போனை பறித்து சுவிட்ச் ஆப் செய்தனர்.

    பின்னர் 5 பேரும் சேர்ந்து மணிகண்டனை கட்டாயப்படுத்தி ஒரு காரில் ஏற்றினர். அவரை காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் அழைந்து சென்று ஒரு விடுதியில் அடைத்து வைத்தனர்.

    அங்கு அவரை அடித்து உதைத்து மிரட்டி பணம் கேட்டனர். உடனே மணிகண்டன் அவரது வங்கிக் கணக்கில் இருந்து பெண்ணின் வங்கி கணக்கிற்கு ரூ.5 லட்சத்தை பரிமாற்றம் செய்தார்.

    மேலும் பத்திரத்தில் ரூ.15 லட்சத்திற்கு கையெழுத்து வாங்கிக் கொண்டனர். பின்னர் மணிகண்டனை விடுவித்து சென்றனர். இதுகுறித்து மணிகண்டன் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வனிதா என்ற பெண் 4 பேருடன் சேர்ந்து மணிகண்டனை காரில் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 5 பேரையும் வலைவீசி தேடி வந்தனர்.

    இந்த நிலையில் மணிகண்டனை கடத்தி பணம் பறித்த மதுக்கரையை சேர்ந்த வனிதா, சீர்காழியை சேர்ந்த முருகன், முருகனின் உறவினர் ராஜா ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    முருகன் கிணத்துக்கடவில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

    தொடர்ந்து 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் போலீசாரிடம் தெரிவித்ததாவது:-

    மணிகண்டன், முருகனின் உறவினர்களுக்கு, அரசு வேலை வாங்கி தருவதாக கூறினார். அதை நம்பி அவர்களும் பல லட்சம் பணத்தை மணிகண்டனிடம் கொடுத்தனர். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் வேலை வாங்கி தரவில்லை. கேட்டால் இழுத்தடித்து வந்தார். இதனால் நாங்கள் அவரை காரில் கடத்தி பணத்தை பறித்தோம் என அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×