என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கட்சி தாவல் தடை சட்டம்
நீங்கள் தேடியது "கட்சி தாவல் தடை சட்டம்"
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வேறு கட்சிக்கு தாவும் போது, பதவி தானாகவே பறிபோகும் வண்ணம் கட்சி தாவல் தடை சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார். #VenkaiahNaidu
புதுடெல்லி:
துணை ஜனாதிபதியாக பதவி ஏற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், வெங்கையா நாயுடு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாநிலங்களவையின் கண்ணியத்தையும், கவுரவத்தையும் மீண்டும் நிலைநிறுத்துவதுதான் எனது முன்னுரிமை பணி. தவறு செய்யும் உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும். மாநிலங்களவை விதிமுறைகளை மாற்றி அமைப்பதற்கான குழு, தனது முதல்கட்ட அறிக்கையை என்னிடம் தந்துள்ளது.
இறுதி அறிக்கை, அடுத்த மாத இறுதியில் கிடைக்கும். கட்சி தாவல் தடை சட்டத்தை கடுமையாக்கும் வகையில், அதில் கடுமையான உட்பிரிவுகளை சேர்க்க வேண்டும். கட்சியை விட்டு விலகுபவர், தனது எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. பதவியை தானாகவே துறந்துவிடும் வகையில், விதிமுறைகளை சேர்க்க வேண்டும். இது, ஒரு தார்மீக பொறுப்பு. ஆனால், சிலர் இதை செய்வார்கள், சிலர் செய்ய மாட்டார்கள். ஆகவே, இதை அரசியல் சட்ட கடமையாக ஆக்க வேண்டும் என கூறியுள்ளார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X