search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடும் அவதி"

    • கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளது. இந்த பகுதியில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள்.
    • பல்வேறு இடங்களில் பெரிய பள்ள ங்கள் உருவாகி உள்ளது. இந்த வழியாகத்தான் பண்ருட்டியில் இருந்து வரும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் வருகின்றன.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளது. இந்த பகுதியில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. அதன்படி பல்வேறு இடங்களில் தற்போது சாலைகள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் நகர் பகுதி பளிச்–சென காணப்படுகிறது. ஆனால் நத்தவெளி-சரவணாநகர் விரிவு பகுதி சாலை தற்போது போக்கு வரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இந்த பகுதியில் அரசு ஊழியர்கள், வக்கீல்கள், டாக்டர்கள், என்ஜினீயர்கள் மற்றும் நடுத்தர மக்கள் ஏராள மானோர் வசித்து வருகி றார்கள்.

    வளர்ந்து வரும் நகர் பகுதியான இங்கு நாளுக்கு நாள் மக்கள் பெருக்கம் அதி கரித்து வருகிறது. ஆனால் இந்த நகரின் பிரதான சாலையாக உள்ள நத்த வெளி-சரவணாநகர் விரிவு பகுதியில் உள்ள ரோடு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. பல்வேறு இடங்களில் பெரிய பள்ள ங்கள் உருவாகி உள்ளது. இந்த வழியாகத்தான் பண்ரு–ட்டியில் இருந்து வரும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் வருகின்றன. இந்த வாகனங்கள் அனைத்தும் பள்ளத்தில் தடுமாறி வருகிறது. 4 சக்கர மற்றும் 2 சக்கர வாகன ஓட்டிகளும் இந்த பள்ளத்தால் கடும் அவதிக்குள்ளாகி வருகி–றார்கள். எனவே மாநக–ராட்சி அதி–காரிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் இந்த விஷ–யத்தில் தனிக்கவனம் செலுத்தி புதிய சாலை அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வலியு–றுத்தி உள்ளனர்.

    ×