search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "heavy suffering"

    • கடலூர் மாவட்டத்தில் மழை காரணமாக பூஜை பொருட்கள் விற்பனை செய்ய முடியாமல் வியாபாரிகள் விரக்தி உள்ளனர்.
    • விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்படுத்தி உள்ளதால் விவசாயிகள் கடும் அவதி இருந்து வருகின்றனர்.

    கடலூர்:

    தமிழக பகுதிகளில் மேல் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்திருந்தனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகின்றன. இதன் காரணமாக இரவு நேரங்களில் மழையும், பகல் நிலவு சுட்டெரிக்கும் வெயிலும் அடித்து வருகின்றது. இந்த நிலையில் நேற்று இரவு கடலூர் , நெல்லிக்குப்பம், பண்ருட்டி, வேப்பூர், விருத்தாச்சலம், புவனகிரி, தொழுதூர், ஸ்ரீமுஷ்ணம், அண்ணாமலை நகர், பரங்கிப்பேட்டை, குப்பநத்தம் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்தன. இதை தொடர்ந்து இன்று காலை வரை கடலூர் நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்தது.

    இதன் காரணமாக நாளை விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாட உள்ள நிலையில் படைப்பதற்கு பூஜை பொருட்கள் சாலை ஓரங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது இந்த தொடர் மழை காரணமாக பூஜை பொருட்கள் பழ வகைகள் போன்றவற்றை மழை காரணமாக விற்க முடியாமல் சாலை வியாபாரிகள் கடும் அவதி அடைந்ததை காண முடிந்தது. மேலும் இந்த பொருட்கள் மற்றும் பழ வகைகள் இன்று, நாளை இரண்டு நாட்களில் விற்பனையானால் மட்டுமே வாங்கி பொருட்களுக்கு பணம் வழங்கி ஏதேனும் சிறிய அளவில் லாபம் கிடைக்கும். இந்த நிலை தொடர்ந்து இருந்தால் எங்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என மிகுந்த வேதனையுடன் தெரிவித்தனர் வியாபாரிகள். கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்படுத்தி உள்ளதால் விவசாயிகள் கடும் அவதி இருந்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் மழை அளவு பின்வருமாறு- குப்பநத்தம் - 44.3வேப்பூர் - 37.0தொழுதூர் - 27.0விருத்தாசலம் - 14.1புவனகிரி - 6.0ஸ்ரீமுஷ்ணம் - 5.6 அண்ணாமலைநகர் - 1.4பரங்கிப்பேட்டை - 1.2 கடலூர் - 0.1மொத்த மழை - 136.70 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.

    • கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளது. இந்த பகுதியில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள்.
    • பல்வேறு இடங்களில் பெரிய பள்ள ங்கள் உருவாகி உள்ளது. இந்த வழியாகத்தான் பண்ருட்டியில் இருந்து வரும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் வருகின்றன.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளது. இந்த பகுதியில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. அதன்படி பல்வேறு இடங்களில் தற்போது சாலைகள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் நகர் பகுதி பளிச்–சென காணப்படுகிறது. ஆனால் நத்தவெளி-சரவணாநகர் விரிவு பகுதி சாலை தற்போது போக்கு வரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இந்த பகுதியில் அரசு ஊழியர்கள், வக்கீல்கள், டாக்டர்கள், என்ஜினீயர்கள் மற்றும் நடுத்தர மக்கள் ஏராள மானோர் வசித்து வருகி றார்கள்.

    வளர்ந்து வரும் நகர் பகுதியான இங்கு நாளுக்கு நாள் மக்கள் பெருக்கம் அதி கரித்து வருகிறது. ஆனால் இந்த நகரின் பிரதான சாலையாக உள்ள நத்த வெளி-சரவணாநகர் விரிவு பகுதியில் உள்ள ரோடு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. பல்வேறு இடங்களில் பெரிய பள்ள ங்கள் உருவாகி உள்ளது. இந்த வழியாகத்தான் பண்ரு–ட்டியில் இருந்து வரும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் வருகின்றன. இந்த வாகனங்கள் அனைத்தும் பள்ளத்தில் தடுமாறி வருகிறது. 4 சக்கர மற்றும் 2 சக்கர வாகன ஓட்டிகளும் இந்த பள்ளத்தால் கடும் அவதிக்குள்ளாகி வருகி–றார்கள். எனவே மாநக–ராட்சி அதி–காரிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் இந்த விஷ–யத்தில் தனிக்கவனம் செலுத்தி புதிய சாலை அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வலியு–றுத்தி உள்ளனர்.

    ×