search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடும் அவதி"

    • சித்திரை மாதம் தொடங்கியுள்ள நிலையில் வருங்காலங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
    • பொதுமக்கள் காரணம் இன்றி வெளியில் சுற்றாமல் இருக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.

    கடலூர்:

    தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர்.

    கடலூர் மாவட்டத்தில் கோடை வெயில் தொடங்கிய நிலையில் மாவட்டம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வருகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை காலையில் கடலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு சில வினாடிகள் லேசான தூறல் மழை பெய்தது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் தற்போது அதிகபட்சமாக 97 டிகிரி வெயில் பதிவாகி வரும் நிலையில், கணிசமாக வெயிலின் தாக்கமும் அதிகரித்து காணப்பட்டு வருகின்றது.

    பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக சாலை ஓரத்தில் உள்ள கடைகளில் பழச்சாறுகள், தர்பூசணி, பழ வகைகள், கரும்பு சாறு, இளநீர் போன்றவற்றை பருகி இளப்பாறி வருகின்றனர். சாலையில் நடந்து செல்லும் இளைஞர்கள், பெரி யவர்கள் குடைப்பிடித்த படியும், பெண்கள் தலையில் ஷால் மற்றும் புடவைகளை போர்த்திய படி செல்கின்றனர்.நேற்று முதல் சித்திரை மாதம் தொடங்கியுள்ள நிலையில் வருங்காலங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    பொதுமக்கள் காரணம் இன்றி வெளியில் சுற்றாமல் இருக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. ஆகையால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதோடு வெயிலின் தாக்கம் குறைந்த பிறகு வெளியில் வரவேண்டும் என மாவட்ட நிர்வாகமும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன.

    • கடைக்காரர்கள் பலர் பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதையை ஆக்கிரமித்து பொருட் கள் வைத்திருந்தனர்.
    • இலவச கழிப்பறையில் சிறுசிறு குறைபாடு உள்ளது.

    கடலூர்:

    கடலூர் பஸ் நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்த மான 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு மாநகராட்சி மூலம் மாதந்தோறும் வாட கை வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடைக்கா ரர்கள் பலர் பஸ் நிலை யத்தில் உள்ள நடைபாதை யை ஆக்கிரமித்து பொருட் கள் வைத்திருந்தனர். இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் நடை பாதையை பயன்படுத்த முடியாமல் கடும் அவதி அடைந்து வந்தனர். பஸ்கள் நிறுத்தப்படும் இடங்களி லேயே பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் நடைபாதை ஆக்கிரமிப்பு களை அகற்ற வேண்டும் என புகார் அளித்தனர். இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ், பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தர விட்டார்.

    அதன் பேரில் மாநகராட்சி வருவாய் ஆய்வாளர்கள் இன்று காலை பஸ் நிலையத்திற்கு சென்று நடைபாதையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்றினர். மேலும் பஸ் நிலையத்துக்குள் பொதுமக்களுக்கு இடை யூறாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களின் காற்றை பிடுங்கி விட்டனர்.இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் கூறுகையில், பஸ் நிலை யத்தில் நடைபாதைகளை ஆக்கிரமித்து கடை வைப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இலவச கழிப்பறையில் சிறுசிறு குறைபாடு உள்ளது. அவை விரைவில் சீரமைக்கப் படும். மேலும் பஸ் நிலை யத்திற்குள் வாகனங்கள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் பஸ் நிலையத்திற்கு இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களை கொண்டு வருபவர்கள் மீது நட வடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட சம்பவத்தால் கடலூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பஸ்சில் ஏறினால் அவினாசியில் நிற்காது என்று நடத்துனர்கள் பயணிகளை வலுக்கட்டாயமாக பஸ்சிலிருந்து இறக்கிவிடுகின்றனர்.
    • உடல்நலம் பாதிக்கப்பட்டு கோவையில் மருத்துவமனைகளுக்கு சென்று வரும் முதியவர்கள், பெண்கள்உள்ளிட்ட பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

    அவினாசி, ஆக.2-

    அவினாசி நகரம் திருப்பூர் மற்றும் கோவை மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. அவினாசியில் இருந்து கோவைக்கு பல்வேறு அலுவல்களுக்காகவும், மாணவ, மாணவியர் உள்ளிட்ட 500 க்கும்மேற்பட்ட பொதுமக்கள் பஸ்சில் தினமும் போய் வருகின்றனர். இந்த நிலையில் பயணிகள் திருப்பூரிலிருந்து அவினாசி, தெக்கலூர் ஆகிய ஊர்களுக்கு செல்ல பஸ்சில் ஏறினால் அவினாசியில் நிற்காது என்று நடத்துனர்கள் பயணிகளை வலுக்கட்டாயமாக பஸ்சிலிருந்து இறக்கிவிடுகின்றனர்.

    அதே போல் கோவையிலிருந்து திருப்பூர், ஈரோடு செல்லும் ஒரு சில பஸ்களை தவிர தனியார் உள்ளிட்ட மற்ற அனைத்து பஸ்களும் அவினாசிக்குள் வராமல் புறவழிச்சாலையில் சென்று வருகின்றனர். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு கோவையில் மருத்துவமனைகளுக்கு சென்று வரும் முதியவர்கள், பெண்கள்உள்ளிட்ட பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

    எனவே கட்டாயம்அனைத்து பஸ்களும் அவினாசி வழியாக வந்து பயணிகளை ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அக்னி நட்சத்திர வெயில் வாட்டி வதைக்க தொடங்கியது.
    • காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 6 மணி வரை நீடிக்கிறது.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. அதிகபட்சமாக 107 டிகிரி வரை வெயில் பதிவானது. இதனால் குழந்தைகள் முதியவர்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    இந்நிலையில் கடந்த மே மாதம் 4-ந் தேதி முதல் அக்னி நட்சத்திர வெயில் வாட்டி வதைக்க தொடங்கியது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதல் மூன்று நாட்கள் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்தது.

    ஆனால் அதன் பிறகு அக்னி நட்சத்திர வெயில் தனது கோர தாண்டவத்தை காட்டத் தொடங்கியது. அதிலும் குறிப்பாக கடந்த 10 நாட்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணம் உள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 6 மணி வரை நீடிக்கிறது.

    குறிப்பாக 11 மணி முதல் மதியம் 5 மணி வரை வெயிலில் தாக்கம் உச்சத்தில் உள்ளது. இந்த நேரத்தில் பொதுமக்கள் தேவை இன்றி வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    வெயிலின் தாக்கத்துடன் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். இவர்கள் எப்படி என்றால் வீட்டில் உள்ளவர்கள் நிலைமை இதைவிட மோசமாக உள்ளது. வீட்டில் 24 மணி நேரமும் மின்விசிறி இயங்கி கொண்டே தான் இருக்கிறது.

    எனினும் வெப்பம் காரணமாக புழுக்கத்தால் குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். வெயில் தாக்கம் காரணமாக உடலில் நீர் சத்து குறைந்து தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளும் அதிகரித்து வருகிறது. எனவே நீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    பொதுமக்கள் வெளியே செல்லும்போது தண்ணீர் பாட்டிலை கூட எடுத்துச் செல்ல அறிவுறுத்தியுள்ளனர். இதுபோக மோர், இளநீர், அதிக அளவில் பருகலாம் எனவும் இதனால் நீர் சத்து கிடைக்கும் இடமும் மதித்து உள்ளனர்.

    நொங்கு, தர்பூசணி, வெள்ளரிக்காயும் உடலுக்கு இதமானது என அறிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக ஈரோட்டில் சராசரியாக 102 டிகிரி வெயில் பதிவாகி வருகிறது. இன்னும் சில நாட்களில் அக்னி நட்சத்திரம் விடைபெறுகிறது. அதுவரை சமாளித்து தான் ஆக வேண்டும் என பொதுமக்கள் ஆதங்கப்பட்டுள்ளனர்.

    • ரங்கநாதபுரம் நடு காலணியை சேர்ந்தவர் சிவக்கொழுந்து. இவரது தாயார் நேற்று இறந்து போனார்
    • ர்மாற்றுப் பாதையில் செல்ல வேண்டுமானால் 2 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றிச் செல்ல வேண்டும் என்றும், இதனால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது,

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி அடுத்த ரங்கநாதபுரம் நடு காலணியை சேர்ந்தவர் சிவக்கொழுந்து. இவரது தாயார் நேற்று இறந்து போனார். அதனைத் தொடர்ந்து இவரது உடலை அடக்கம் செய்ய தனியார் நிலங்களுக்கு இடையே உள்ள வண்டிப்பாதை வழியாக அடக்கம் செய்ய உடலை எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் நடந்தன ஆனால் இந்த வழியாக செல்லக்கூடாது என சிலர் வேலி அமைத்ததாக தகவல் கிடைத்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி போலீசார் மற்றும் தாசில்தார் சுரேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இருதரப்பினரும் பிடிவாதம் பிடிக்கவே அரசு அதிகாரிகள் செய்வ தறியாது திகைத்தனர்.

    ரங்கநாதபுரம் நடு காலணியை சேர்ந்தவர் சிவக்கொழுந்து. இவரது தாயார் நேற்று இறந்து போனார்மாற்றுப் பாதையில் செல்ல வேண்டுமானால் 2 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றிச் செல்ல வேண்டும் என்றும், இதனால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் தாங்கள் வழக்கமாக பயன்படுத்தும் வண்டிப்பாதையை திறந்து விடக் கோரி நடு காலனி மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். முடிவு ஏற்படாத நிலையில் அப்பகுதி மக்கள் வேலியை உடைத்து விட்டு வழக்கமாக செல்லும் வண்டிப் பாதையை பயன்படுத்தி மூதாட்டியின் உடலை சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். இதனை அடுத்து அப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நீடித்து வருகிறது. 

    • புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
    • இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன

    கடலூர்:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். நிரந்தர ஊதிய விகிதம் இல்லாத ஊழியர்களுக்கு நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பொது விநியோக திட்டத்திற்கு தனித்துறை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் சார்பில் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அதன்படி கடலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் பணி புரியும் அரசு பணியாளர் சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் ஏராளமானோர் பணிக்கு வரவில்லை. ஆனால் அரசு அலுவலகங்கள், ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்பட்டன. இந்த வேலை நிறுத்தத்தில் கடலூர் மாவட்டத்தில் சுமார் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும், கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு பணியாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    • கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி பெண் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார்.
    • கடலூர் மாவட்டம் புவனகிரிைய சேர்ந்தஸ்டெல்லா மேரி. மாற்றுத்திறனாளி

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை என்பதால் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்திலிருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகளை குறித்து கோரிக்கை மனுக்களை நேரில் வந்து வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றத்திறனாளி திடீரென்று சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர் கடலூர் மாவட்டம் புவனகிரிைய சேர்ந்தஸ்டெல்லா மேரி. மாற்றுத்திறனாளி. பட்டதாரி என்பது தெரிய வந்தது.

    அவர் போலீசாரிடம் கூறும் போது, கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய முதலமைச்சர் இவரது தந்தைக்கு சுய தொழில் செய்வதற்கு பெட்டிக்கடை வழங்கி உள்ளார். இதனை தொடர்ந்து தற்போது மாற்றுத்திறனாளியான நான் கடையை நடத்தி வருகிறேன்.. இந்த நிலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் அனுமதி பெற்ற பிறகு கடையை நடத்த வேண்டும் என உத்தரவிட்டதால் கடந்த 3 மாதமாக வருமானம் இல்லாமல் கடும் அவதி அடைந்து வருகின்றோம். மேலும் 90 வயது எனது தாயார் மிகுந்த அவதி அடைந்து வருகின்றார். ஆகையால் சாலை ஓரத்தில் உள்ள எனது பெட்டி கடைக்கு உரிய அனுமதி வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். என ஸ்கூடெல்லா மேரி கூறினார். அப்போது உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து உரிய தீர்வு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறி போலீசார் அறிவுறுத்தினார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • தேவகோட்டையில் உரிய நேரத்தில் அரசு பஸ்கள் இயக்காததால் மாணவ-மாணவிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
    • மாணவ-மாணவிகள் நிலையை கருத்தில் கொண்டு பள்ளி முடியும் நேரத்தில் அரசு பஸ்களை இயக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சுற்றி உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அரசு பஸ்கள் மூலம் தேவகோட்டையில் உள்ள பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இதற்காக காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வரு கின்றன. மாலையில் பள்ளி முடிந்து தேவகோட்டை பஸ் நிலையத்திற்கு செல்ல 4.30 மணிக்கு '3 ஏ' அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் கடந்த சில வாரங்களாக மாணவ-மாணவிகளை புறக்கணிக்கும் வகையில் குறிப்பிட்ட அரசு பஸ் முன்கூட்டியே 4.15 மணிக்கு சென்றுவிடுவதாக புகார் எழுந்துள்ளது.இதனால் மாணவ-மாணவிகள் பள்ளியில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பஸ் நிலையத்திற்கு நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே மாணவ-மாணவிகள் நிலையை கருத்தில் கொண்டு பள்ளி முடியும் நேரத்தில் அரசு பஸ்களை இயக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • அப்பகுதியில் நடந்து செல்வோரும், வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்
    • கழிவு நீரும், சாக்கடை நீரும் பல நாட்களாக தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது.

    விழுப்புரம் :

    மரக்காணம் அருகே நகர் ஊராட்சியில் மாரியம்மன் கோவில் தெரு உள்ளது. இதில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர் இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் அனைவரும் விவசாய குடும்பத்தினை சேர்ந்தவர்கள். இந்த தெருவில் சாக்கடை கழிவு நீர் குடிநீருடன் கலந்து தெருவில் ஓடுவதாலும், அப்பகுதியில் நடந்து செல்வோரும், வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தெருவில் உள்ள பள்ளத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீரும், சாக்கடை நீரும் பல நாட்களாக தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. அதில் கொசு உற்பத்தியாகிறது. இதனால் மர்ம நோய்களும், மலேரியா, தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே விழுப்புரம் மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்து உடனடியாக அந்த மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து சென்றனர்.
    • மழை நீரை அகற்றும் பணியில்கொட்டும் மழையிலும்அதிகாரிகள் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் சுற்றுப்புற வட்டார கிராமங்களில் நேற்றுஇரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து சென்றனர். பண்ருட்டி கடலூர் ரோடு, சென்னை சாலை, கும்பகோணம் சாலை, காந்தி ரோடு, ராஜாஜி சாலை, பகுதிகளில் சாலைகளில் மழை நீர் வெள்ளை நீராக பெருக்கெடுத்து ஓடுகிறதுபண்ருட்டி போலீஸ் லைன் 3வது தெருவில் மழைநீர் குடியிருப்புக்குள் புகுந்தது பண்ருட்டி பகுதிகளில் உள்ள ஏரி,ஆறு,குளங்களில் நீர் நிரம்பி வழிகிறது. கனமழை காரணமாக வருவாய்த்துறை, நகராட்சி துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை அதிகாரிகள் இரவு முழுவதும் தங்களது அலுவலகங்களில் தங்கி இருந்து மழை பாதிப்புகள் குறித்து தீவிரமாக கண்காணித்து வந்தனர் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில்கொட்டும் மழையிலும்அதிகாரிகள் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    • தாளவாடியில் இருந்து கோடிபுரம் கிராமத்துக்கு இயக்கப்படும் அரசு பஸ் இயக்கப்படாததால் பள்ளி மாணவ, மாணவிகள் பஸ் நிலையத்திலேயே 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்துக் கிடந்தனர்.
    • தங்கள் குழந்தைகள் வீட்டுக்கு வராததால் பெற்றோர்கள் அலறி அடித்து கொண்டு தாளவாடி பேருந்து நிலையம் வந்தனர்.

    தாளவாடி:

    தாளவாடி அடுத்த தலமலை, கோடிபுரம், நெய்தாளபுரம், முதியனூர், தொட்டாபுரம், சிக்கள்ளி, இக்களூர் போன்ற மலை கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் சுமார் 150-க்கும் மேற்ப ட்டோர் தாளவாடியில் உள்ள அரசு மேல்நிலை ப்பள்ளியில் படித்து வருகின்றனர்.

    இவர்கள் தினந்தோறும் அரசு பஸ்சில் பள்ளிக்கு வந்து செல்வது வழக்கம்.காலையில் 7 மணிக்கும், 8.30 மணிக்கும் இயக்க ப்படும் பஸ் மூலமாக பள்ளிக்கு வருகின்றனர். பின்னர் மாலையில் 6 மணிக்கு இயக்கப்படும் அரசு பஸ் மூலம் தங்கள் கிராமத்துக்கு செல்கின்றனர்.

    இந்த நிலையில் வழக்கம் போல தாளவாடியில் இருந்து கோடிபுரம் கிராமத்துக்கு இயக்கப்படும் அரசு பஸ் இயக்கப்ப டாததால் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பஸ் நிலையத்திலேயே 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்துக் கிடந்தனர்.

    இந்நிலையில் தங்கள் குழந்தைகள் வீட்டுக்கு வராததால் பெற்றோர்கள் அலறி அடித்து கொண்டு தாளவாடி பேருந்து நிலையம் வந்தனர்.

    பின்னர் விசாரித்த போது பஸ் இயக்கப்படாதது தெரிய வந்தது. இது பற்றி போக்குவரத்து துறை அதிகாரியிடம் கேட்டபோது பொது மக்களுக்கு சரிவர பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் வழக்கம் போல் 6 மணிக்கு இயக்கப்படும் அரசு பஸ் 7 மணி அளவில் தாளவாடியில் இருந்து கோடிபுரம் கிராமத்திற்கு இயக்கப்பட்டது.

    இது பற்றி பள்ளி மாணவ, மாணவிகள் கூறும்போது,

    நாங்கள் மலை கிராமத்தில் இருந்து இங்கு வந்து படித்து செல்கிறோம். காலையில் 7 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி வந்தால் மாலை 7 மணி அல்லது 8 மணிக்கு தான் வீட்டிற்கு செல்ல முடிகிறது. வீட்டுக்கு சென்று படிக்கக்கூட முடிவதில்லை. கடந்த சில நாட்களாக 6 மணிக்கு இயக்கப்படும் அரசு பஸ் சரிவர இயக்கப்ப டுவதில்லை. இதனால் நாங்கள் வீட்டிற்கு செல்ல இரவு 9 மணி வரை ஆகிறது.

    அடர்ந்த வனப்பகுதியில் வனவிலங்கு நடமாட்டம் உள்ள பகுதியில் தங்கள் வீடுகளுக்கு செல்ல அச்சமாக உள்ளதாகவும் தற்போது மழை காலம் என்பதாலும் அச்சத்துடனே பள்ளிக்கு சென்று வருதாகவும் மாணவ, மாணவிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சரியான நேரத்துக்கு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினர்.

    • கடலூர் மாவட்டத்தில் மழை காரணமாக பூஜை பொருட்கள் விற்பனை செய்ய முடியாமல் வியாபாரிகள் விரக்தி உள்ளனர்.
    • விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்படுத்தி உள்ளதால் விவசாயிகள் கடும் அவதி இருந்து வருகின்றனர்.

    கடலூர்:

    தமிழக பகுதிகளில் மேல் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்திருந்தனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகின்றன. இதன் காரணமாக இரவு நேரங்களில் மழையும், பகல் நிலவு சுட்டெரிக்கும் வெயிலும் அடித்து வருகின்றது. இந்த நிலையில் நேற்று இரவு கடலூர் , நெல்லிக்குப்பம், பண்ருட்டி, வேப்பூர், விருத்தாச்சலம், புவனகிரி, தொழுதூர், ஸ்ரீமுஷ்ணம், அண்ணாமலை நகர், பரங்கிப்பேட்டை, குப்பநத்தம் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்தன. இதை தொடர்ந்து இன்று காலை வரை கடலூர் நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்தது.

    இதன் காரணமாக நாளை விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாட உள்ள நிலையில் படைப்பதற்கு பூஜை பொருட்கள் சாலை ஓரங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது இந்த தொடர் மழை காரணமாக பூஜை பொருட்கள் பழ வகைகள் போன்றவற்றை மழை காரணமாக விற்க முடியாமல் சாலை வியாபாரிகள் கடும் அவதி அடைந்ததை காண முடிந்தது. மேலும் இந்த பொருட்கள் மற்றும் பழ வகைகள் இன்று, நாளை இரண்டு நாட்களில் விற்பனையானால் மட்டுமே வாங்கி பொருட்களுக்கு பணம் வழங்கி ஏதேனும் சிறிய அளவில் லாபம் கிடைக்கும். இந்த நிலை தொடர்ந்து இருந்தால் எங்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என மிகுந்த வேதனையுடன் தெரிவித்தனர் வியாபாரிகள். கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்படுத்தி உள்ளதால் விவசாயிகள் கடும் அவதி இருந்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் மழை அளவு பின்வருமாறு- குப்பநத்தம் - 44.3வேப்பூர் - 37.0தொழுதூர் - 27.0விருத்தாசலம் - 14.1புவனகிரி - 6.0ஸ்ரீமுஷ்ணம் - 5.6 அண்ணாமலைநகர் - 1.4பரங்கிப்பேட்டை - 1.2 கடலூர் - 0.1மொத்த மழை - 136.70 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.

    ×