search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவினாசி நகருக்குள் வராமல் செல்லும் பஸ்கள் பயணிகள் கடும் அவதி
    X

    கோப்பு படம்.

    அவினாசி நகருக்குள் வராமல் செல்லும் பஸ்கள் பயணிகள் கடும் அவதி

    • பஸ்சில் ஏறினால் அவினாசியில் நிற்காது என்று நடத்துனர்கள் பயணிகளை வலுக்கட்டாயமாக பஸ்சிலிருந்து இறக்கிவிடுகின்றனர்.
    • உடல்நலம் பாதிக்கப்பட்டு கோவையில் மருத்துவமனைகளுக்கு சென்று வரும் முதியவர்கள், பெண்கள்உள்ளிட்ட பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

    அவினாசி, ஆக.2-

    அவினாசி நகரம் திருப்பூர் மற்றும் கோவை மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. அவினாசியில் இருந்து கோவைக்கு பல்வேறு அலுவல்களுக்காகவும், மாணவ, மாணவியர் உள்ளிட்ட 500 க்கும்மேற்பட்ட பொதுமக்கள் பஸ்சில் தினமும் போய் வருகின்றனர். இந்த நிலையில் பயணிகள் திருப்பூரிலிருந்து அவினாசி, தெக்கலூர் ஆகிய ஊர்களுக்கு செல்ல பஸ்சில் ஏறினால் அவினாசியில் நிற்காது என்று நடத்துனர்கள் பயணிகளை வலுக்கட்டாயமாக பஸ்சிலிருந்து இறக்கிவிடுகின்றனர்.

    அதே போல் கோவையிலிருந்து திருப்பூர், ஈரோடு செல்லும் ஒரு சில பஸ்களை தவிர தனியார் உள்ளிட்ட மற்ற அனைத்து பஸ்களும் அவினாசிக்குள் வராமல் புறவழிச்சாலையில் சென்று வருகின்றனர். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு கோவையில் மருத்துவமனைகளுக்கு சென்று வரும் முதியவர்கள், பெண்கள்உள்ளிட்ட பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

    எனவே கட்டாயம்அனைத்து பஸ்களும் அவினாசி வழியாக வந்து பயணிகளை ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×